Thursday, July 14, 2011

"இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்...! "

அப்ப இது வரைக்கும் என்னய்யா செஞ்சீங்க,

பயங்கரவாதிக்கு பேவரிட் இடமாக மும்பை இருக்கிறது. சொல்லி வச்சது மாறி சவேரி பசாரில் மூன்றாவது முறையாக வெடித்து இருக்கிறான்.


டிராபிக் போலீஸ் , போதைப் பொருள் தடுப்பு போலீஸ் என்று இருப்பது போல பயங்கரவாத தடுப்பு போலீஸ் அமைப்பை உருவாக்கி மும்பையில் எல்லா இடங்களிலும் ஸ்டேசனை உருவாக்கி இருக்க வேண்டும். மும்பையில் சாலைகளில் வீடியோ காமெராக்களை அதிகமாகப் பொறுத்த வேண்டும். பிளாட்பாரத்தில் கடை வைத்து இன்பார்மர்கள் ஆக்கி புதிய நபர்கள் வரும் போது தகவல் குடுக்க சொல்லலாம்.


ஆனால் பொறுப்பில் இருப்போர் செய்வது என்ன? பயங்கரவாதி குண்டு வெடித்தவுடன் , இது முகமற்ற கோழைகளின் செயல், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொல் ல வேண்டியது, பிளைட் பிடித்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துபார்வை இட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவோரை தடவிக் கொடுக்க வேண்டியது, மறுபடியும் பிளைட் பிட்த்து திரும்ப வேண்டியது – இதுதான் நடக்கிறது!

Wednesday, July 6, 2011

அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

ஏழைகளிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலங்களையும் பண்ணையார்களும், மாவட்ட செயளால , வட்ட செயளால அரசியல் வாதிகளும் மிரட்டி, உருட்டி பறித்துக் கொண்டு அவர்களை நிர்க்கதி ஆக்குவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இப்படி கட்டப் பஞ்சாயத்தினால் பறிக்கப் பட்ட நிலம் போக மிச்சம் ஏதாவது நிலம் பாக்கி இருந்தால் அதையும் விடாமல் அரசாங்கமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி “சட்ட பூர்வமாக” அடிமாட்டு விலைக்கும் கீழே கொடுத்து, அந்த நிலங்களைப் பிடுங்கி அதை பிரைவேட்டு பில்டர்களின் கையில் கொடுத்து அழகு பார்க்கறது.


அந்த பிரைவேட்டு பில்டர் அதில் நாற்பது மாடி , அறுபது மாடி பிளாட் போட்டு விற்று கோடிகளைக் குவிக்கிறான்.

இதே கைங்கர்யத்தை உ.பி. அரசு காண கச்சிதமாக செய்து, நோய்டா பகுதியில் 156 ஹெக்டேர் நிலத்தை ஏழைகளிடம் இருந்து பிடுங்கி பிரைவேட் பில்டர்களிடம் கொடுத்தது.


அதிகாரம் உள்ளோர் பிரித்துக் கொண்டோர்,
அப்பாவிகள் தெருவில் நின்றார் ,
சிலர் வாழ வாழ
பலர் தாழ தாழ
ஒரு போதும் உச்ச நீதி மன்றம் கொடுத்தில்லை


என்று வாழ்த்து படும் படி , ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் படியான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது.எல்லா நிலத்தையும் விவாசிகளிடம் திருப்பிக் கொடு என்று சொல்லி உயர் நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து விட்டது.


ஜஸ்டிஸ் சிங்வி அவர்கள், ”விவாசாயிகளுக்கு தாய் , வாழ்வாதாரம், சோறு எல்லாமே நிலம் தானே. நீங்கள் பொது நலம் என்ற போர்வையில் முதலாளிகள் கொழுக்க வகைசெய்து கொடுக்கிறீர்கள்” என்று கொதித்து எழுந்து விட்டார்.

நீதி அரசர்களே, நீங்கள் நீடூழி வாழ்க, இந்த நாட்டில் நீதி உயிரோடு உள்ளது என்பதைக் காட்டி உள்ளீர்கள்.

Title:அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

Monday, July 4, 2011

அஸ்ஸலாமு அலைகும்!

“அஸ்ஸலாமு அலைகும்” என்றால் “உங்களிடம் அமைதி நிலவட்டும் (peace be upon you) ” என்று அர்த்தம் ஆகும்.

ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளுள் சிறப்பானது மன அமைதி ஆகும். ஒரு மனிதனிடம் எவ்வளவு பணம், சொத்து, பதவி, அதிகாரம், செல்வாக்கு இருந்தாலும் அவற்றை விட அவனுக்கு நன்மை தருவது நோயற்ற உடலும், அமைதியான மனமுமே.

தமிழர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “வணக்கம்” என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோமோ அதே போல ”அஸ்ஸலாமு அலைகும் ” என்பது ஒருவர் இன்னொருவரை வாழ்த்தும் வாசகமாக உள்ளது. நான் ஒரு முறை லிப்டில் நுழைந்த போது அதே பில்டிங்கில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி செய்து வந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் அந்த லிப்டில் இருந்தார். அவரை நான் அவ்வப் போது லிப்டில் சந்தித்து இருக்கிறேன். அன்று அவரைக் கண்டவுடன் நான் அவரிடம் அஸ்ஸலாமு அலைகும் என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வ அலைகும் ஸலாம் என்றார்.


“‘நீங்கள் சிறப்பான செயலை செய்கிறீர்கள். ஒருவரை ஒருவர் காண நேரிட்டால் முந்திக் கொண்டு ஸலாம்சொல்ல வேண்டும் என முகமது (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்) சொல்லி இருக்கிறார்” என்றார்.

இது பண்பாட்டை உருவாக்கும் செயல் ஆகும். இது மனிதாபிமானத்தையும் கட்டுகிறது. ஏதோ கவலையுடன், ஒரு செயல் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தவிப்புடன் செல்வோரிடம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று வாழ்த்தினால் அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. நாம் ஏழையா இருக்கோமே, நம்மளை யாரும் மதிப்பது இல்லையே என்று நினைப்பவரிடம் அஸ்ஸலாம் அலைகும் என்றால், அட நம்மளையும் மதித்து முகமன் சொல்லுகிறாரே அவர் மனதில் புத்துணர்ச்சி உருவாகிறது.

தெருவில் செல்லும் போது ஒருவரை ஒருவர் காண நேர்ந்தால் முந்திக் கொண்டு சலாம் சொல்லுவது சிநேகத்தை வளர்ப்பதாகவும், ஈகோவை குறைப்பதாகவும் உள்ளது. அவன் முதல்ல சலாம் சொல்லட்டும் என்று இருவரும் இருந்தால், கடைசியில் இருவருமே முகமன் சொல்லாமல் சென்று விடுவார்கள். எனக்கு அவன் சலாம் சொல்லலை, பார்த்தும் பாக்காமா போயிட்டான் இல்லை, சரி கவனிச்சுக்கறேன் என்று கர்ரம் வைக்க அது காரணமாகி விடும்.


வெறுப்புணர்ச்சியும், வெறி உணர்ச்சியும், கோவமும் , குரோதமும், ஆசையும் , தாபமும் கொழுந்து விட்டெரியும் மனதில் அமைதி உருவாகாது.


வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி , கோவம், குரோதம்… இவை எல்லாம் நீக்கிய மனதிலேயே அமைதி உருவாகும்.

நாம் எந்த அளவுக்கு ஆசைகளை விடுகிறோமோ, அந்த அளவுக்கு நம் மனதில் அமைதி நிலவும்.

நாம் எந்த அளவுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசை, தாபம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அமைதி நீங்கி மனம் பொங்கித் தவிக்கிறது.

அன்பும், சினேக மனப்பான்மையும்., கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் மனதிலே அமைதியை உருவாக்குகிறது.

நம் அனைவரின் மனதிலும் அமைதி நிலவட்டும்.

அஸ்ஸலாமு அலைகும்!

Saturday, July 2, 2011

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு ….

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு …. என்று சொல்லுபவர்களை பிடிவாதக்காரர்கள் என்கிறோம் அல்லவா,

பல முறை முயல்களை பிடித்து எத்தனை கால்கள் உள்ளன என்று அறியத் தர முடியும். ஆனாலும் பிடிவாதக்கார நண்பர் விடாமல் நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் செயல்படுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பொது மக்களும், பிடிவாதக்காரரின் சமாளிப்பு செயல் என்பதை புரிந்து கொள்வார்கள். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிற பிடிவாதத்தை விட ஆபத்தான பிடிவாதம் கடவுள் கோட்பாட்டு பிடிவாதம்.

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிறவர்களாவது இருக்கின்ற ஒரு விடயத்தை பிறர் காணக் கூடிய, உணரக் கூடிய விடயத்தை பற்றி சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த கடவுள் என்பது இல்லாத ஒன்று அல்லது இன்றைக்கு உலகில் யாரும் பார்க்காத , அறியாத, உணராத ஒன்று, இருக்கிறது என்பதற்கு verifiable proof இல்லாத ஒன்று.
எனவே இல்லாத ஒன்றிலே என்ன ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனாலும் மனிதன் தான் நினைத்தபடி வாழும் சுதந்திரனாக இல்லாமல் இருப்பதால், கஷ்டம் வரும் போது கடவுள் வந்து தன்னைக் காப்பார் – சிறு வயதில் அன்னை உதவிக்கு வருவது போல என கருதிக் கொள்கிறான்.
இந்த நிலையில் தான் சார்ந்துள்ள மதத்தில் சொல்லப் பட்டுள்ள கடவுள் கோட்பாடு உண்மையானது என நம்புகிறான்.

மதங்களோ ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையான கோட்பாட்டை சொல்லுகின்றன. சரி, ஏதாவது ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு அமைதியாக வழிபட்டுக் கொள்ளுங்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. நான் சொல்லுற கோட்பாடுதான் சரி என்கின்றனர். அதை மாத்தி சொல்லாதே, கடவுளை இழிவு படுத்தாதே … என்று சொல்ல ஆரம்பித்து, சர்ச்சையில் துவங்கி பெரிய ஆயதங்களுடன் சண்டையில் கொண்டு போய் விடுகிறது.

ஒரு சாரார் கடவுள் நிகரற்றவர், அவர் மனிதனாக வந்தார் என்றால் அவரை சுருக்கி பலகீனப் படுத்தியது போல ஆகும் என்கிறார்.

இன்னொரு சாரார் கடவுள் எல்லையற்றவராக எல்லா இடத்திலும் வூடுருவி, எல்லாவற்றையும் தனக்குளே வைத்திருப்பவராக இருக்கிறார், அவரே மனிதனாகவும் அவதாரம் எடுககிறார் என்கின்றனர்.

சரி மனிதனாக அவதாரம் எடுக்கிறார், அப்ப ( as example) ஐயப்பனாக சுருங்கி விடுகிறாரே, அவ்வளவு பெரிய கடவுள் ஒரு சிறிய மனிதனாகி சுருங்கி விட்டது போலக் காட்டுவது, கடவுளை சுருக்குவது போல மனசுக்கு வருத்தமாக இருப்பதாக பீலிங்ஸ் ஏற்பட்டு வருத்தப் படுகின்றனர்.


இது கடவுளை சுருக்குவது போல ஆகாது, மனிதனுக்கு உதவி செய்ய இன்னொரு மனிதனாக வந்தால் தவறில்லை. மேலே உட்கார்ந்து கொண்டு கீழே நடப்பதை வேடிக்கை பார்ப்பது அருளாளனுக்கு உரிய தன்மையா, இறங்கி வந்து உதவுவதுதானே கருணையை காட்டும் செயல் என்கின்றனர்.

“அடப் போயா , கடவுள் மனுசனா பொறந்தா மல ஜலம் எல்லாம் கழிக்கணும், அதெல்லாம் அசிங்கம்யா , மலம் அசுத்தமான நாற்றமெடுத்தது , அத போயி கடவுளோட சம்பந்தப் படுத்த முடியுமா? “

“மலம் என்பது செரிக்கப் பட்ட உணவின் சக்கை, அதை உடல் வெளி ஏற்றுகிறது .மனிதனோடு வாழ்ந்து அவனுடைய கஷ்டத்துக்கு உதவ தான மனுசனாவே வராரு, மல ஜலம் கழிச்சா தப்பா?”


“சொன்னா உனக்கு புரியுதா, மனுஷன் மாறியே கல்யாணம் பண்ணி… உடல் உறவு கொள்வது… இதெல்லாம் அசிங்கமா இல்லை?”

“கடவுள் மனுசனா பொறந்து ஒரு மனிதப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி உடல் உறவு கொண்டால் அதில் என்னய்யா தவறு? இன்னொருத்தன் பொண்டாட்டியோடு உடல் உறவு கொண்டால் தான் தவறு. எதுயா அசிங்கம் , நீ நான் சொல்ற படி செஞ்சுட்டு மேலே வா, உனக்கு இதை தாரேன், அதை தாரேன், என்று சொல்லுவதாக கோட்பாடு வைப்பது அசிங்கம் இல்லை , ஒரு பொண்ணை வூரரிய , உறவறிய தொட்டுத் தாலி காட்டி அவளோடு குடும்பம் அடத்தி அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது அசிங்கமா?”


இப்படியாக யாருமே பார்க்காத கடவுளின் பெருமையைக் காப்பற்ற நடத்தப் படும் விவாதங்கள் சூடாகின்றன. இவர்களின் இந்த விவாதங்களைக் கேட்டு சூடாகிப் போன சிலர் இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் என்று கத்தி கம்பு, வாளை ஓங்கி இரத்த ஆறை ஓட விடுகின்றனர்.


இதெல்லாம் தேவையா? நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை ஆக இருக்கும் என்று அவசியம் இல்லை. உண்மை என்றால் எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.


ஏதோ ஒரு கடவுள் கோட்பாட்டை வைத்துக் கொண்டு , அமைதியாக வழி பட்டு விட்டு சென்றால் பரவாயில்லை. வழிபாடு முடிந்தவுடன் மனதிலே பொறுமையும், நிதானமும் , சிநேகமும், சகிப்புத் தன்மையும் , இணக்கமும், சாந்தமும் … உருவாகுமானால் அது நல்லது. ஆனால் கடவுள் கோட்பாடுகள் சிநேகத்தை சகிப்புத் தன்மையை, சாந்தத்தை … எல்லாம் உருவாக்காமல் மோதலை, அடாவடியை, கட்டாயப் படுத்துதலை… இவை போன்றவற்றை உருவாக்குகின்றன என்றால் இதெல்லாம் நல்லாவா இருக்கு பாஸ்? இதனால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றனர் சார்வாகர், புத்தர், விவேகானந்தர், பெரியார்… போன்றவர்கள்.