Friday, June 30, 2017

Beef ....in India!



It was not totally unexpected ever since BJP came to power in India by 2014,that it would follow the "principle"s of  RSS, and other Parivar groups( Read as "Hindutva Fundementalists" to make things clear for western readers)!

Mr. Modi got a fantastic election victory in 2014, mainly because the ambitious indian people expected and wished that Mr.Modi would spur the industrial, technological, economical growth and thus bring more prosperity to all Indians.

Mr. Modi also tries to woo the foreign investors, try to put " make in india' agenda..etc...
How much forward is made in this direction is a matter to be analysed ...but his friends(mentors?) at the parivar groups are working overtime to take back the indian society to stone age, by promoting intolerence in the soceity!

In what way the restrictions made in selling of cows is going to provide growth for India and Indians?

பி.ஜே.பி 2014 ல் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பின்னர்ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற பரிவார அமைப்புகள் தங்களின் " கொள்கை " களை செயலாக்க முனைவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

2014 ம் ஆண்டு மோடி ஒரு அற்புதமான தேர்தல் வெற்றியைப் பெற்றார்இந்திய மக்களின் எதிர்பார்ப்பு  மற்றும் விருப்பம் என்னவாக இருந்ததென்றால் திரு.மோடி தொழில்துறை, தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சியை உற்சாகப்படுத்தி, எல்லா இந்தியர்களுக்கும் மேலும் செழிப்பை அளிப்பார் என்பதாகும்.
இந்த திசையில் எவ்வளவு முன்னேற்றம் செய்யப்பட்டது என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
ஆனால் பரிவார இயக்கத்தினர் இந்திய சமுதாயத்தின் நல்லிணக்க போக்கை மாற்றி, அதை கற் காலத்துக்கு தள்ளும் போக்கை ஜோராக கடைப் பிடிக்கின்றனர்.
மாடுகளை விற்பதில் புதிய இடைஞ்சல் களை உருவாக்குவது, அரசுக்கு அவசியமான செயலா? மாடுகளை விற்பதில் புதிய இடைஞ்சல் களை உருவாக்குவது, அரசுக்கு அவசியமான செயலா . இதை சாக்காக வைத்து யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் , வன்முறை செய்யலாம் என்ற நிலை உருவானதற்கு யார் பொறுப்பு ? இதை சரி செய்து நல்லிணக்க பாதைக்கு இட்டு செல்ல வேண்டியது அரசின் கடமை

Saturday, August 20, 2011

டக்.... டக்..... நாங்க டெல்லி போலீஸ், கதவைத் திறங்க!

//சார் , இந்த ஆளு எந்த லஞ்சமும் வாங்காத பஞ்ச பரதேசியா இருக்கானே, காலங்கார்த்தாலே இவன் மூஞ்சில முழிக்க வைச்சுட்டீங்களே, எனக்கு இன்னிக்கு எந்த கலெக்சனும் இல்லாம போயிடும் போல இருக்கே!//
காட்சி 1:

(நாடக அங்கத்தினர்கள்: குடும்பத் தலைவர் சின்னசாமி , குடும்பத் தலைவி பரிமளம், டி.எஸ்.பி. தினேஷ்,கான்ஸ்டபிள் கண்ணையா 402 )


டக்…. டக்…..

சின்னசாமி : பரிமளம், யாரு கதவைத் தட்டுறாங்கனு பாரு !

பரிமளம்(கதவின் வியூ பைண்டர் வழியாக வெளியே பார்த்தபடி) : யாரோ காக்கி சட்டை போட்டுக்கிட்டு நிக்கிறாங்க!

சின்னசாமி : இந்த வாட்ச் மேன் காலங்கார்த்தாலே எதுக்கு வந்து கதவை தட்டுறான் ? சரி கதவைத் திற!

(பரிமளம் கதவைத் திறக்கிறார். போலீசார் இருவர் வீட்டுக்கு உள்ளே வருகின்றனர்.)
குட்மார்னிங் மிஸ்டர் சின்னசாமி! நான் டி.எஸ்.பி. ஷியாம், இவர் கான்ஸ்டபில் கண்ணையா, வீ ஆர் பிரம் டில்லி போலீஸ்!

சின்னசாமி : அப்படியா, வாங்க உட்காருங்க, பரிமளம் அந்த பேனைப் போடு, சார் என்ன விசயமா வந்திருக்கீங்க?

டி.எஸ்.பி. தினேஷ்: உங்க கிட்ட விசாரணை நடத்த வந்திருக்கோம்!

சின்னசாமி (அதிர்ச்சியுடன்) : விசாரணையா, சார் நான் டி.வி.யில வானிலை அறிக்கை வாசிக்கிறவன், எங்க டிபார்ட்மென்ட்ல அஞ்சு பைசா கூட லஞ்சம் கிடைக்காதுங்க. என் வீட்டை வேணா நல்லா சோதனை போட்டுக்கங்க. பேங்கில ஹவ்சிங் லோன், ஆபீஸ்ல பி.எப். லோன்னு கழுத்தை சுத்தி கடன் இருக்கு சார்.

கான்ஸ்டபிள் கண்ணையா (டி. எஸ்.பி காதருகில் மெதுவான குரலில்) : சார், இந்த ஆளு எந்த லஞ்சமும் வாங்காத பஞ்ச பரதேசியா இருக்கானே, காலங்கார்த்தாலே இவன் மூஞ்சில முழிக்க வைச்சுட்டீங்களே, எனக்கு இன்னிக்கு எந்த கலெக்சனும் இல்லாம போயிடும் போல இருக்கே!

டி.எஸ்.பி. தினேஷ் :அட நீ கொஞ்சம் சும்மா இருய்யா (என்று கண்ணையாவை அதட்டுகிறார் )!

டி.எஸ்.பி. தினேஷ் (சின்னசாமியிடம் ) : சரி இன்னிக்கு உங்க புரோகிராம் என்ன, இப்ப என்ன பண்ணப் போறீங்க?

சின்னசாமி : சார் இப்ப டி.வி. யில ரஜினி, குஸ்பு நடிச்ச பாண்டியன் படம் போடப் போறாங்க , அதைப் பார்க்கப் போறேன்…

டி.எஸ்.பி. தினேஷ் : யோவ் .. அந்தப் படம் சரியான மொக்க , அதையா பார்க்கப் போற…

சின்னசாமி : என்ன டி.எஸ்.பி. சார் இதை சொல்லவா நீங்க வந்தீங்க…

டி.எஸ்.பி. தினேஷ் :ஆ..ங் …. சரி நீங்க இப்ப வெளியிலே எங்கும் போகப் போறதில்லை சரிதானே…
சின்னசாமி : இன்னிக்கு முழுதும் எங்கயும் வெளியில் போகற ஐடியா இல்லை சார்…

டி.எஸ்.பி. தினேஷ்: இந்த பார்க்…

சின்னசாமி : இல்லை சார், எந்த பார்க்குக்கும் நான் போகும் உத்தேசம் இல்லைங்க…

டி.எஸ்.பி. தினேஷ் அப்படியா …. நல்லது.. நான் வரேன்…

இந்த நேரத்தில் டி.எஸ்.பி.யின் செல் போன் ஒலிக்கிறது .. எடுத்துப் பேசுகிறார்
எஸ் சார்… என்ன சார் ….ஒ.கே சார் . போனை ஆப் செய்கிறார்.

டி.எஸ்.பி. தினேஷ்: மிஸ்டர் சின்னசாமி, நீங்க காலையில என்ன சாப்பிட்டீங்க?

சின்னசாமி : சார் … உண்மையை சொல்லனும்னா … வீட்டில நேத்து சாயந்திரமே கேஸ் தீர்ந்து போச்சு… அதுனால காலையில் இருந்து ஒரு டீ கூட குடிக்கலை.

டி.எஸ்.பி. தினேஷ்: மிஸ்டர் சின்னசாமி, நீங்க எந்த வித அனுமதியும் இல்லாம உண்ணாவிரதம் இருக்கீங்க… அதுனால நான் உங்களை அரெஸ்ட் பண்றேன்…

சின்னசாமி : சார், என்ன சார் இது, பரிமளம் ஒரு பிடி அரிசியை கொண்டுவந்து என் வாயில் போடு, அப்ப உண்ணாவிரதம் இல்லைன்னு ஆயிடும்!

டி.எஸ்.பி. தினேஷ் :யூ மீன் வாய்க்கரிசி? டூ யூ பிளான் பார் சூசைட் ?

சின்னசாமி : சார் … சார் .. நான் எது சொன்னாலும் குற்றமா போகுதே, நான் சாதரணமான ஆளு சார்… என்னை விட்டுடுங்க…

டி.எஸ்.பி. தினேஷ் : மிஸ்டர் சின்னசாமி, நீங்க ஒரு டீ.வி. நாடகத்துல, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்”, அப்படின்னு கத்தி இருக்கீங்க!

சின்னசாமி : அதுல என்ன சார் தப்பு!

டி.எஸ்.பி. தினேஷ் :அப்படி வாங்க, யோவ் 402, அந்த விலங்கை எடுத்து இவர் கையில மாட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் பிரதமரையும் லோக் பால் மாசோதாவுக்குள் கொண்டு வரணும்னு சொல்றதுதானே உங்க அர்த்தம்?

சின்னசாமி : சார் நான் அந்த அர்த்தத்துல சொல்லலை !

டி.எஸ்.பி. தினேஷ் :அப்ப ஒரு வெள்ளை பேப்பரை எடுங்க. எடுத்து “பிரதமர், பிரதமரின் உறவுகாரங்க, பிரதமரின் நண்பர்கள், பிரதமரின் காரியதரிசி, பிரதமரின் டிரைவர், வெளிநாட்டில் வசிக்கும் உள்நாட்டு நண்பர்கள், வெளி நாட்டில் வசிக்கும் வெளி நாட்டு நண்பர்கள் …. ஆகியோருக்கு லோக்பால் மசோதா வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் , அதோடு இவர்கள் வூழலே செய்ய இயலாத கரை படியாத கரத்துக்கு சொந்தக் கார்கள் என்று லோக்பால் அமைப்பு சான்றிதழும் தர வேண்டும்” என்று எழுதி உங்க கையெழுத்தை போட்டு தாங்க!

சின்னசாமி : சார் நான் எதுக்கு தான் இதை எல்லாம் எழுதி தரனும், எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!

டி.எஸ்.பி. தினேஷ் :அப்ப பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதி உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்கிறோம். உங்களை நீதிபதி முன்னால நிறுத்தப் போறோம், சட்டப் படி தான் எல்லா நடவடிக்கையும் எடுக்குறோம்.

சின்னசாமி : சார், சார் ஒண்ணுமே புரியலையே, நான் ஒரு தப்பும் பண்ணலை, என்னை விட்டுடுங்க!

கான்ஸ்டபிள் கண்ணையா :யோவ், நீ ஆளும் வர்க்கத்தோட ஒத்துப் போய் ஜால்ரா போடா தெரியாத கேனை , அதான் ஒன தப்பு… புரியுதா.. லந்து பண்ணாம ஜீப்புல ஏறு!

டி.எஸ்.பி. தினேஷ் ( ஜீப் கிளம்பு முன் வெளியே நின்ற பத்திர்க்கையாளரிடம் ): “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததர்க் காகவும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தடைக் கல்லாக இருந்ததற்காவும் திரு. சின்னசாமி யை கைது செய்கிறோம்” !
(திரை )

Tuesday, August 2, 2011

கடவுளை மற, மனிதனை நினை!

பெட்டியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்குவதா பகுத்தறிவுத்தனம்? குட்டியைப் பார்ந்தவுடன் குப்புற விழுவதா பகுத்தறிவின் இலட்சணம்?
உண்மையைத் தேடுவதே எனக்கு முக்கியம் என்று இருப்பவரே பகுத்தறிவுவாதி !

பகுத்தறிவுவாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான் உதரணமாக இருந்திருக்கிறார் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நசிகேதஸ்!

மனித வாழ்க்கையின் உண்மை என்ன என்பதை அறியும் பகுத்தறிவு ஆராய்ச்சியே இந்திய ஆன்மீகத்தின் அடிப்படை!

இந்திய ஆன்மீக ஆராய்ச்சியானது மனிதனின் வாழ்க்கையை ஆராய்ந்து அவனை துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலைக்கு அழைத்து செல்வதற்க்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. கடவுளை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்கிற தொனி அதில் உள்ளது!

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் (ஒரு பேச்சுக்கு as an assumption), அவர் எல்லாம் வல்லவராக இருக்காரு, அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றுதான் அவருடைய ஏஜென்ட்டுகள் எல்லோரும் சொல்லுகின்றனர்.

So பிரச்சினை எல்லாம் மனுசனுக்கு தான், அவனுக்கு என்ன பிரச்சினை என்று பார்த்து அவனுக்கு நிவாரணத்தை முதல்ல குடு. கஷ்டப்படரவனை முதல்ல கவனி என்கிறது இந்திய ஆன்மீகம்.

இந்திய ஆன்மீகத்தின் மிக முக்கிய நூல்களில் ஒன்றான கட உபநிடதத்தின் ஆராய்ச்சி எதைப் பற்றியது என்று பார்ப்போம்.

கட உபடநிடத்த்தில் நசிகேதஸ் எனும் இளவரசனுக்கு எமன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எமன் அவனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறான்.


நசிகேதஸ் எமனிடம்,

"இறந்த பிறகு என்ன ஆகிறது, சிலர் மனிதன் வாழ்க்கை முடிந்தது, அவன் உயிரும் இறந்தது என்கின்றனர். சிலர் உடல் இறந்தாலும் உயிர் இறப்பதில்லை என்கின்றனர்...இறந்த பின் உண்மையில் நடப்பது என்ன"

என்று கேட்கிறான் !

"Choose now, Nachiketas, the third gift."

"There is doubt concerning people who are deceased.
Some say they exist, and others say they do not exist.
Being taught by you, I would know this.
Of the gifts, this is the third gift."

எவ்வளவு சிறப்பான பகுத்தறிவு ஆராய்ச்சி பாருங்கள்.

இறந்த பிறகு மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறது என ஆத்தீகரைப் போல நசிகேதஸ் நம்பவும் இல்லை.

நாத்தீகரைப் போல உடலோடு உயிரும் இறந்து விடுகிறது என்று முடிவு கட்டவும் இல்லை.

மாறாக, உண்மை எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக, சரியான உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அணுகுகிறான்!

எவ்வளவு சிறப்பான நடுநிலையான பகுத்தறிவு நிலைப்பாடு பாருங்கள்!

"எந்தக் கடவுள் உண்மையான கடவுள் அண்ணே, எந்தக் கடவுளை கும்பிட்டா நாம சொர்க்கத்துக்கு போலாம், அதை சட்டு புட்டுன்னு சொல்லுங்க அண்ணே" என்று எப்படியாவது ஜஸ்ட் பாஸ் பண்ணினா போரும் என்று எண்ணுவது போல சிந்திக்கவில்லை நசிகேதஸ்.

இந்த எமனும் லேசுப்ப் பட்ட ஆளு இல்லை, "அதை எல்லாம் நீ ஏம்பா கேக்குற, ஒனக்கு பூமியில ஆட்சி செலுத்தும் அதிகாரம் வேணுமா, தங்கம், வைரம்வேணுமா, உனக்கு நீண்ட ஆயுளோடு கூடிய பசங்க, பேரப் பசங்க தரேன், மாடு மனை, யானைகள், தேர்கள், அழகான கன்னிகள் உனக்கு வேணுமா" என்று இலவசங்களை வாரி விடும் அரசியல்வாதியின் பாணியை உபயோகித்துப் பார்க்கிறான்.

"Even the gods of old had doubt as to this.
It is not easy to understand, so subtle is this law.
Choose another gift, Nachiketas.
Do not press me; release me from this one.""

Even the gods had doubt as to this,
and you, Death, say it is not easy to understand.
And another teacher of it like you is not to be found.
No other gift is comparable to this at all.

""Choose sons and grandsons who shall live a century,
many cattle, elephants, gold, and horses.
Choose a great estate of land
and live as many years as you want.
If you think this is an equal gift,
choose wealth and long life.
Nachiketas, be the ruler of a great country;
I will make you the enjoyer of your desires.
Whatever desires are hard to get in the mortal world,
request all those desires at your pleasure.
Here are lovely maidens with chariots and music;
these are not to be attained by anyone.
Be served by these whom I give you.

ஆனால் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய்க்கும் பால் மாறி ஓட்டுப் போடும் பேமானி நிலைப்பாட்டை நசிகேதஸ் எடுக்கவில்லை.

தோட்டம் தொரவு, காடு கழனி, மாடு மனை, தங்கம், வைரம் எதுவும் வேண்டாம் , இந்த டப்பா பிகருங்களை நீங்களே வச்சுக்கங்க, மனித வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதிலை சொன்னா போரும் என்று சொல்லி அறிவைத் தேடுவதில் உறுதியான பகுத்தறிவாளனாக செயல் பட்டு இருக்கிறார் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நசிகேதஸ்!


Transient are the things of mortals, Ender,
wearing away all the vigor of their senses.
Even a full life is short.
Yours be the chariots; yours be the dance and song.

A person cannot be satisfied with wealth.
Shall we enjoy wealth when we have seen you?
Shall we live so long as you are in power?
This is the gift to be chosen by me.
Having approached undecaying immortality,
what decaying mortal on this earth below that understands,
that contemplates the pleasures of beauty and enjoyment,
would delight in an over-long life?

This about which they doubt, Death,
what there is in the great passing-on---tell us that.
This gift that penetrates the mystery,
no other than that does Nachiketas choose."

பகுத்தறிவுவாதி என்றால் இப்படி இருக்க வேண்டும்!

பெட்டியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்குவதா பகுத்தறிவுத்தனம்? குட்டியைப் பார்ந்தவுடன் குப்புற விழுவதா பகுத்தறிவின் இலட்சணம்?

இன்றைக்கு தம்மை ஆன்மீக வாதி என சொல்லிக் கொள்ளும் பலர்
கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து, எஸ்டேட் , பங்களா, எடுபுடி என வாழ்கின்றனர்,
குட்டிகளைப் பார்த்தவுடன் மல்லாந்து விடுகின்றனர்.

அப்படிப் பட்டவரை அணுகாமல், கண்ணியமும், கட்டுப்பாடும் உடைய பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கும் உண்மையான
ஆன்மீக வாதியான நசிகேதஸ் போன்றோரின் கருத்துக்களைப் படித்தாலே சிறப்பு.



கடவுளை பற்றி நசிகேதஸ் கவலைப் படவும் இல்லை, அடிபணியவும் இல்லை!

Thursday, July 14, 2011

"இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்...! "

அப்ப இது வரைக்கும் என்னய்யா செஞ்சீங்க,

பயங்கரவாதிக்கு பேவரிட் இடமாக மும்பை இருக்கிறது. சொல்லி வச்சது மாறி சவேரி பசாரில் மூன்றாவது முறையாக வெடித்து இருக்கிறான்.


டிராபிக் போலீஸ் , போதைப் பொருள் தடுப்பு போலீஸ் என்று இருப்பது போல பயங்கரவாத தடுப்பு போலீஸ் அமைப்பை உருவாக்கி மும்பையில் எல்லா இடங்களிலும் ஸ்டேசனை உருவாக்கி இருக்க வேண்டும். மும்பையில் சாலைகளில் வீடியோ காமெராக்களை அதிகமாகப் பொறுத்த வேண்டும். பிளாட்பாரத்தில் கடை வைத்து இன்பார்மர்கள் ஆக்கி புதிய நபர்கள் வரும் போது தகவல் குடுக்க சொல்லலாம்.


ஆனால் பொறுப்பில் இருப்போர் செய்வது என்ன? பயங்கரவாதி குண்டு வெடித்தவுடன் , இது முகமற்ற கோழைகளின் செயல், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொல் ல வேண்டியது, பிளைட் பிடித்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துபார்வை இட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவோரை தடவிக் கொடுக்க வேண்டியது, மறுபடியும் பிளைட் பிட்த்து திரும்ப வேண்டியது – இதுதான் நடக்கிறது!

Wednesday, July 6, 2011

அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

ஏழைகளிடம் இருக்கும் துண்டு துக்கடா நிலங்களையும் பண்ணையார்களும், மாவட்ட செயளால , வட்ட செயளால அரசியல் வாதிகளும் மிரட்டி, உருட்டி பறித்துக் கொண்டு அவர்களை நிர்க்கதி ஆக்குவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இப்படி கட்டப் பஞ்சாயத்தினால் பறிக்கப் பட்ட நிலம் போக மிச்சம் ஏதாவது நிலம் பாக்கி இருந்தால் அதையும் விடாமல் அரசாங்கமே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி “சட்ட பூர்வமாக” அடிமாட்டு விலைக்கும் கீழே கொடுத்து, அந்த நிலங்களைப் பிடுங்கி அதை பிரைவேட்டு பில்டர்களின் கையில் கொடுத்து அழகு பார்க்கறது.


அந்த பிரைவேட்டு பில்டர் அதில் நாற்பது மாடி , அறுபது மாடி பிளாட் போட்டு விற்று கோடிகளைக் குவிக்கிறான்.

இதே கைங்கர்யத்தை உ.பி. அரசு காண கச்சிதமாக செய்து, நோய்டா பகுதியில் 156 ஹெக்டேர் நிலத்தை ஏழைகளிடம் இருந்து பிடுங்கி பிரைவேட் பில்டர்களிடம் கொடுத்தது.


அதிகாரம் உள்ளோர் பிரித்துக் கொண்டோர்,
அப்பாவிகள் தெருவில் நின்றார் ,
சிலர் வாழ வாழ
பலர் தாழ தாழ
ஒரு போதும் உச்ச நீதி மன்றம் கொடுத்தில்லை


என்று வாழ்த்து படும் படி , ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் படியான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது.எல்லா நிலத்தையும் விவாசிகளிடம் திருப்பிக் கொடு என்று சொல்லி உயர் நீதி மன்ற தீர்ப்பை உறுதி செய்து விட்டது.


ஜஸ்டிஸ் சிங்வி அவர்கள், ”விவாசாயிகளுக்கு தாய் , வாழ்வாதாரம், சோறு எல்லாமே நிலம் தானே. நீங்கள் பொது நலம் என்ற போர்வையில் முதலாளிகள் கொழுக்க வகைசெய்து கொடுக்கிறீர்கள்” என்று கொதித்து எழுந்து விட்டார்.

நீதி அரசர்களே, நீங்கள் நீடூழி வாழ்க, இந்த நாட்டில் நீதி உயிரோடு உள்ளது என்பதைக் காட்டி உள்ளீர்கள்.

Title:அப்பாவி விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாக பிடுங்கிய நிலங்களை திருப்பிக் கொடு. உ. பி. அரசுக்கு உச்ச நீதி மன்றம் சாட்டை!

Monday, July 4, 2011

அஸ்ஸலாமு அலைகும்!

“அஸ்ஸலாமு அலைகும்” என்றால் “உங்களிடம் அமைதி நிலவட்டும் (peace be upon you) ” என்று அர்த்தம் ஆகும்.

ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளுள் சிறப்பானது மன அமைதி ஆகும். ஒரு மனிதனிடம் எவ்வளவு பணம், சொத்து, பதவி, அதிகாரம், செல்வாக்கு இருந்தாலும் அவற்றை விட அவனுக்கு நன்மை தருவது நோயற்ற உடலும், அமைதியான மனமுமே.

தமிழர்கள் எப்படி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “வணக்கம்” என்று அன்புடன் சொல்லிக் கொள்கிறோமோ அதே போல ”அஸ்ஸலாமு அலைகும் ” என்பது ஒருவர் இன்னொருவரை வாழ்த்தும் வாசகமாக உள்ளது. நான் ஒரு முறை லிப்டில் நுழைந்த போது அதே பில்டிங்கில் வேறு ஒரு அலுவலகத்தில் பணி செய்து வந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் அந்த லிப்டில் இருந்தார். அவரை நான் அவ்வப் போது லிப்டில் சந்தித்து இருக்கிறேன். அன்று அவரைக் கண்டவுடன் நான் அவரிடம் அஸ்ஸலாமு அலைகும் என்றேன். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வ அலைகும் ஸலாம் என்றார்.


“‘நீங்கள் சிறப்பான செயலை செய்கிறீர்கள். ஒருவரை ஒருவர் காண நேரிட்டால் முந்திக் கொண்டு ஸலாம்சொல்ல வேண்டும் என முகமது (ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம்) சொல்லி இருக்கிறார்” என்றார்.

இது பண்பாட்டை உருவாக்கும் செயல் ஆகும். இது மனிதாபிமானத்தையும் கட்டுகிறது. ஏதோ கவலையுடன், ஒரு செயல் நல்லபடியாக நடந்து முடிய வேண்டும் என்று தவிப்புடன் செல்வோரிடம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று வாழ்த்தினால் அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. நாம் ஏழையா இருக்கோமே, நம்மளை யாரும் மதிப்பது இல்லையே என்று நினைப்பவரிடம் அஸ்ஸலாம் அலைகும் என்றால், அட நம்மளையும் மதித்து முகமன் சொல்லுகிறாரே அவர் மனதில் புத்துணர்ச்சி உருவாகிறது.

தெருவில் செல்லும் போது ஒருவரை ஒருவர் காண நேர்ந்தால் முந்திக் கொண்டு சலாம் சொல்லுவது சிநேகத்தை வளர்ப்பதாகவும், ஈகோவை குறைப்பதாகவும் உள்ளது. அவன் முதல்ல சலாம் சொல்லட்டும் என்று இருவரும் இருந்தால், கடைசியில் இருவருமே முகமன் சொல்லாமல் சென்று விடுவார்கள். எனக்கு அவன் சலாம் சொல்லலை, பார்த்தும் பாக்காமா போயிட்டான் இல்லை, சரி கவனிச்சுக்கறேன் என்று கர்ரம் வைக்க அது காரணமாகி விடும்.


வெறுப்புணர்ச்சியும், வெறி உணர்ச்சியும், கோவமும் , குரோதமும், ஆசையும் , தாபமும் கொழுந்து விட்டெரியும் மனதில் அமைதி உருவாகாது.


வெறுப்புணர்ச்சி, வெறி உணர்ச்சி , கோவம், குரோதம்… இவை எல்லாம் நீக்கிய மனதிலேயே அமைதி உருவாகும்.

நாம் எந்த அளவுக்கு ஆசைகளை விடுகிறோமோ, அந்த அளவுக்கு நம் மனதில் அமைதி நிலவும்.

நாம் எந்த அளவுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசை, தாபம் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அமைதி நீங்கி மனம் பொங்கித் தவிக்கிறது.

அன்பும், சினேக மனப்பான்மையும்., கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையும் மனதிலே அமைதியை உருவாக்குகிறது.

நம் அனைவரின் மனதிலும் அமைதி நிலவட்டும்.

அஸ்ஸலாமு அலைகும்!

Saturday, July 2, 2011

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு ….

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு …. என்று சொல்லுபவர்களை பிடிவாதக்காரர்கள் என்கிறோம் அல்லவா,

பல முறை முயல்களை பிடித்து எத்தனை கால்கள் உள்ளன என்று அறியத் தர முடியும். ஆனாலும் பிடிவாதக்கார நண்பர் விடாமல் நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் செயல்படுவார்.

இதை எல்லாம் பார்க்கும் பொது மக்களும், பிடிவாதக்காரரின் சமாளிப்பு செயல் என்பதை புரிந்து கொள்வார்கள். நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிற பிடிவாதத்தை விட ஆபத்தான பிடிவாதம் கடவுள் கோட்பாட்டு பிடிவாதம்.

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலு என்று சொல்லுகிறவர்களாவது இருக்கின்ற ஒரு விடயத்தை பிறர் காணக் கூடிய, உணரக் கூடிய விடயத்தை பற்றி சொல்லுகிறார்கள்.
ஆனால் இந்த கடவுள் என்பது இல்லாத ஒன்று அல்லது இன்றைக்கு உலகில் யாரும் பார்க்காத , அறியாத, உணராத ஒன்று, இருக்கிறது என்பதற்கு verifiable proof இல்லாத ஒன்று.
எனவே இல்லாத ஒன்றிலே என்ன ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனாலும் மனிதன் தான் நினைத்தபடி வாழும் சுதந்திரனாக இல்லாமல் இருப்பதால், கஷ்டம் வரும் போது கடவுள் வந்து தன்னைக் காப்பார் – சிறு வயதில் அன்னை உதவிக்கு வருவது போல என கருதிக் கொள்கிறான்.
இந்த நிலையில் தான் சார்ந்துள்ள மதத்தில் சொல்லப் பட்டுள்ள கடவுள் கோட்பாடு உண்மையானது என நம்புகிறான்.

மதங்களோ ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையான கோட்பாட்டை சொல்லுகின்றன. சரி, ஏதாவது ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு அமைதியாக வழிபட்டுக் கொள்ளுங்கள் என்றால் அப்படி இருப்பதில்லை. நான் சொல்லுற கோட்பாடுதான் சரி என்கின்றனர். அதை மாத்தி சொல்லாதே, கடவுளை இழிவு படுத்தாதே … என்று சொல்ல ஆரம்பித்து, சர்ச்சையில் துவங்கி பெரிய ஆயதங்களுடன் சண்டையில் கொண்டு போய் விடுகிறது.

ஒரு சாரார் கடவுள் நிகரற்றவர், அவர் மனிதனாக வந்தார் என்றால் அவரை சுருக்கி பலகீனப் படுத்தியது போல ஆகும் என்கிறார்.

இன்னொரு சாரார் கடவுள் எல்லையற்றவராக எல்லா இடத்திலும் வூடுருவி, எல்லாவற்றையும் தனக்குளே வைத்திருப்பவராக இருக்கிறார், அவரே மனிதனாகவும் அவதாரம் எடுககிறார் என்கின்றனர்.

சரி மனிதனாக அவதாரம் எடுக்கிறார், அப்ப ( as example) ஐயப்பனாக சுருங்கி விடுகிறாரே, அவ்வளவு பெரிய கடவுள் ஒரு சிறிய மனிதனாகி சுருங்கி விட்டது போலக் காட்டுவது, கடவுளை சுருக்குவது போல மனசுக்கு வருத்தமாக இருப்பதாக பீலிங்ஸ் ஏற்பட்டு வருத்தப் படுகின்றனர்.


இது கடவுளை சுருக்குவது போல ஆகாது, மனிதனுக்கு உதவி செய்ய இன்னொரு மனிதனாக வந்தால் தவறில்லை. மேலே உட்கார்ந்து கொண்டு கீழே நடப்பதை வேடிக்கை பார்ப்பது அருளாளனுக்கு உரிய தன்மையா, இறங்கி வந்து உதவுவதுதானே கருணையை காட்டும் செயல் என்கின்றனர்.

“அடப் போயா , கடவுள் மனுசனா பொறந்தா மல ஜலம் எல்லாம் கழிக்கணும், அதெல்லாம் அசிங்கம்யா , மலம் அசுத்தமான நாற்றமெடுத்தது , அத போயி கடவுளோட சம்பந்தப் படுத்த முடியுமா? “

“மலம் என்பது செரிக்கப் பட்ட உணவின் சக்கை, அதை உடல் வெளி ஏற்றுகிறது .மனிதனோடு வாழ்ந்து அவனுடைய கஷ்டத்துக்கு உதவ தான மனுசனாவே வராரு, மல ஜலம் கழிச்சா தப்பா?”


“சொன்னா உனக்கு புரியுதா, மனுஷன் மாறியே கல்யாணம் பண்ணி… உடல் உறவு கொள்வது… இதெல்லாம் அசிங்கமா இல்லை?”

“கடவுள் மனுசனா பொறந்து ஒரு மனிதப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி உடல் உறவு கொண்டால் அதில் என்னய்யா தவறு? இன்னொருத்தன் பொண்டாட்டியோடு உடல் உறவு கொண்டால் தான் தவறு. எதுயா அசிங்கம் , நீ நான் சொல்ற படி செஞ்சுட்டு மேலே வா, உனக்கு இதை தாரேன், அதை தாரேன், என்று சொல்லுவதாக கோட்பாடு வைப்பது அசிங்கம் இல்லை , ஒரு பொண்ணை வூரரிய , உறவறிய தொட்டுத் தாலி காட்டி அவளோடு குடும்பம் அடத்தி அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது அசிங்கமா?”


இப்படியாக யாருமே பார்க்காத கடவுளின் பெருமையைக் காப்பற்ற நடத்தப் படும் விவாதங்கள் சூடாகின்றன. இவர்களின் இந்த விவாதங்களைக் கேட்டு சூடாகிப் போன சிலர் இதைப் பேசித் தீர்க்க முடியாது , தீர்த்துட்டு பேசிக்கலாம் என்று கத்தி கம்பு, வாளை ஓங்கி இரத்த ஆறை ஓட விடுகின்றனர்.


இதெல்லாம் தேவையா? நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே, நம்பிக்கை என்பது உண்மை ஆக இருக்கும் என்று அவசியம் இல்லை. உண்மை என்றால் எப்போது வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.


ஏதோ ஒரு கடவுள் கோட்பாட்டை வைத்துக் கொண்டு , அமைதியாக வழி பட்டு விட்டு சென்றால் பரவாயில்லை. வழிபாடு முடிந்தவுடன் மனதிலே பொறுமையும், நிதானமும் , சிநேகமும், சகிப்புத் தன்மையும் , இணக்கமும், சாந்தமும் … உருவாகுமானால் அது நல்லது. ஆனால் கடவுள் கோட்பாடுகள் சிநேகத்தை சகிப்புத் தன்மையை, சாந்தத்தை … எல்லாம் உருவாக்காமல் மோதலை, அடாவடியை, கட்டாயப் படுத்துதலை… இவை போன்றவற்றை உருவாக்குகின்றன என்றால் இதெல்லாம் நல்லாவா இருக்கு பாஸ்? இதனால் தான் கடவுளை மற மனிதனை நினை என்றனர் சார்வாகர், புத்தர், விவேகானந்தர், பெரியார்… போன்றவர்கள்.