Tuesday, August 2, 2011

கடவுளை மற, மனிதனை நினை!

பெட்டியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்குவதா பகுத்தறிவுத்தனம்? குட்டியைப் பார்ந்தவுடன் குப்புற விழுவதா பகுத்தறிவின் இலட்சணம்?
உண்மையைத் தேடுவதே எனக்கு முக்கியம் என்று இருப்பவரே பகுத்தறிவுவாதி !

பகுத்தறிவுவாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான் உதரணமாக இருந்திருக்கிறார் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நசிகேதஸ்!

மனித வாழ்க்கையின் உண்மை என்ன என்பதை அறியும் பகுத்தறிவு ஆராய்ச்சியே இந்திய ஆன்மீகத்தின் அடிப்படை!

இந்திய ஆன்மீக ஆராய்ச்சியானது மனிதனின் வாழ்க்கையை ஆராய்ந்து அவனை துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலைக்கு அழைத்து செல்வதற்க்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. கடவுளை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்கிற தொனி அதில் உள்ளது!

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் (ஒரு பேச்சுக்கு as an assumption), அவர் எல்லாம் வல்லவராக இருக்காரு, அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றுதான் அவருடைய ஏஜென்ட்டுகள் எல்லோரும் சொல்லுகின்றனர்.

So பிரச்சினை எல்லாம் மனுசனுக்கு தான், அவனுக்கு என்ன பிரச்சினை என்று பார்த்து அவனுக்கு நிவாரணத்தை முதல்ல குடு. கஷ்டப்படரவனை முதல்ல கவனி என்கிறது இந்திய ஆன்மீகம்.

இந்திய ஆன்மீகத்தின் மிக முக்கிய நூல்களில் ஒன்றான கட உபநிடதத்தின் ஆராய்ச்சி எதைப் பற்றியது என்று பார்ப்போம்.

கட உபடநிடத்த்தில் நசிகேதஸ் எனும் இளவரசனுக்கு எமன் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எமன் அவனுக்கு மூன்று வரங்களை அளிக்கிறான்.


நசிகேதஸ் எமனிடம்,

"இறந்த பிறகு என்ன ஆகிறது, சிலர் மனிதன் வாழ்க்கை முடிந்தது, அவன் உயிரும் இறந்தது என்கின்றனர். சிலர் உடல் இறந்தாலும் உயிர் இறப்பதில்லை என்கின்றனர்...இறந்த பின் உண்மையில் நடப்பது என்ன"

என்று கேட்கிறான் !

"Choose now, Nachiketas, the third gift."

"There is doubt concerning people who are deceased.
Some say they exist, and others say they do not exist.
Being taught by you, I would know this.
Of the gifts, this is the third gift."

எவ்வளவு சிறப்பான பகுத்தறிவு ஆராய்ச்சி பாருங்கள்.

இறந்த பிறகு மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறது என ஆத்தீகரைப் போல நசிகேதஸ் நம்பவும் இல்லை.

நாத்தீகரைப் போல உடலோடு உயிரும் இறந்து விடுகிறது என்று முடிவு கட்டவும் இல்லை.

மாறாக, உண்மை எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக, சரியான உண்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அணுகுகிறான்!

எவ்வளவு சிறப்பான நடுநிலையான பகுத்தறிவு நிலைப்பாடு பாருங்கள்!

"எந்தக் கடவுள் உண்மையான கடவுள் அண்ணே, எந்தக் கடவுளை கும்பிட்டா நாம சொர்க்கத்துக்கு போலாம், அதை சட்டு புட்டுன்னு சொல்லுங்க அண்ணே" என்று எப்படியாவது ஜஸ்ட் பாஸ் பண்ணினா போரும் என்று எண்ணுவது போல சிந்திக்கவில்லை நசிகேதஸ்.

இந்த எமனும் லேசுப்ப் பட்ட ஆளு இல்லை, "அதை எல்லாம் நீ ஏம்பா கேக்குற, ஒனக்கு பூமியில ஆட்சி செலுத்தும் அதிகாரம் வேணுமா, தங்கம், வைரம்வேணுமா, உனக்கு நீண்ட ஆயுளோடு கூடிய பசங்க, பேரப் பசங்க தரேன், மாடு மனை, யானைகள், தேர்கள், அழகான கன்னிகள் உனக்கு வேணுமா" என்று இலவசங்களை வாரி விடும் அரசியல்வாதியின் பாணியை உபயோகித்துப் பார்க்கிறான்.

"Even the gods of old had doubt as to this.
It is not easy to understand, so subtle is this law.
Choose another gift, Nachiketas.
Do not press me; release me from this one.""

Even the gods had doubt as to this,
and you, Death, say it is not easy to understand.
And another teacher of it like you is not to be found.
No other gift is comparable to this at all.

""Choose sons and grandsons who shall live a century,
many cattle, elephants, gold, and horses.
Choose a great estate of land
and live as many years as you want.
If you think this is an equal gift,
choose wealth and long life.
Nachiketas, be the ruler of a great country;
I will make you the enjoyer of your desires.
Whatever desires are hard to get in the mortal world,
request all those desires at your pleasure.
Here are lovely maidens with chariots and music;
these are not to be attained by anyone.
Be served by these whom I give you.

ஆனால் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய்க்கும் பால் மாறி ஓட்டுப் போடும் பேமானி நிலைப்பாட்டை நசிகேதஸ் எடுக்கவில்லை.

தோட்டம் தொரவு, காடு கழனி, மாடு மனை, தங்கம், வைரம் எதுவும் வேண்டாம் , இந்த டப்பா பிகருங்களை நீங்களே வச்சுக்கங்க, மனித வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதிலை சொன்னா போரும் என்று சொல்லி அறிவைத் தேடுவதில் உறுதியான பகுத்தறிவாளனாக செயல் பட்டு இருக்கிறார் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் நசிகேதஸ்!


Transient are the things of mortals, Ender,
wearing away all the vigor of their senses.
Even a full life is short.
Yours be the chariots; yours be the dance and song.

A person cannot be satisfied with wealth.
Shall we enjoy wealth when we have seen you?
Shall we live so long as you are in power?
This is the gift to be chosen by me.
Having approached undecaying immortality,
what decaying mortal on this earth below that understands,
that contemplates the pleasures of beauty and enjoyment,
would delight in an over-long life?

This about which they doubt, Death,
what there is in the great passing-on---tell us that.
This gift that penetrates the mystery,
no other than that does Nachiketas choose."

பகுத்தறிவுவாதி என்றால் இப்படி இருக்க வேண்டும்!

பெட்டியைப் பார்த்தவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்குவதா பகுத்தறிவுத்தனம்? குட்டியைப் பார்ந்தவுடன் குப்புற விழுவதா பகுத்தறிவின் இலட்சணம்?

இன்றைக்கு தம்மை ஆன்மீக வாதி என சொல்லிக் கொள்ளும் பலர்
கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து, எஸ்டேட் , பங்களா, எடுபுடி என வாழ்கின்றனர்,
குட்டிகளைப் பார்த்தவுடன் மல்லாந்து விடுகின்றனர்.

அப்படிப் பட்டவரை அணுகாமல், கண்ணியமும், கட்டுப்பாடும் உடைய பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கும் உண்மையான
ஆன்மீக வாதியான நசிகேதஸ் போன்றோரின் கருத்துக்களைப் படித்தாலே சிறப்பு.



கடவுளை பற்றி நசிகேதஸ் கவலைப் படவும் இல்லை, அடிபணியவும் இல்லை!

2 comments:

  1. /அப்படிப் பட்டவரை அணுகாமல், கண்ணியமும், கட்டுப்பாடும் உடைய பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கும் உண்மையான
    ஆன்மீக வாதியான நசிகேதஸ் போன்றோரின் கருத்துக்களைப் படித்தாலே சிறப்பு./
    அருமை சகோ,
    கடவுளை கேள்வி கேட்காமல் மத புத்தகம்,குருக்கள் விளக்கம் படி பின்பற்றினால் சொர்க்கம இல்லையேல் நரகம்.இதுதான் மதம்,ஆன்மீகம் என்றாகி விட்ட சூழ்நிலையில் உண்மையான தேடல்கள் ஆன்மீகத்தில் உள்ளதை அறிமுகம் செய்வது சிறப்பு.
    இந்த உபநிடதம் முழுவதையுமே தமிழில் தொடர் பதிவாக வெளியிட வேண்டுகிறேன்.நன்றி

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது போல் உபநிடதங்கள் கூறினாலும், முன்னுக்கு பின் முரணாய் ஆங்காங்கே இடை சொருகல்கள் இருக்க தான் செய்கிறது.. ஆன்மீக வாதி கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்துகிறான், நாத்திக வாதி மனசாட்சிக்கு பயந்து வாழ்க்கை நடத்துகிறான்.. எது சரி எது தவறு என்று பகுத்து ஆராய்ந்து வாழாதவன் மனிதன் என்ற இலக்கணத்தில் இருந்து தவறி விடுகிறான்..

    ReplyDelete