Wednesday, April 13, 2011

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து இந்து ம‌த‌ இராஜ்ஜியமா?

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து இந்து ம‌த‌ இராஜ்ஜியமா?

"இராம‌ இராம‌ ஜெய‌ இராஜா இராம்'' என்ற‌ க‌ட்டுரையை நாம் இந்த‌க் க‌ட்டுரைக்கு முன்பு வெளியிட்டோம். We published that at thiruchchikkaaran.worpress.com

அத‌ற்க்கு முன்பாக‌வே நாம் ''எல்லொரும் கொண்டாடுவொம் அல்லாஹ்வின் பெய‌ரை சொல்லி'' என்ர‌ த‌லைப்பிலும், ''ஆத‌வ‌ன் உதிக்கும் முன் எழுவீர் இயேசு ஆண்ட‌வ‌ர் தோன்றி விட்டார்'' என்ற‌ த‌லைப்பிலும் க‌ட்டுரைக‌ளை இட்டு, கிறிஸ்தும‌ஸ், ஈத் , தீபாவ‌ளி போன்ற‌ ப‌ண்டிகைக‌ளை உல‌கில்  அனைவ‌ரும் கொண்டாடுவ‌து நல்லிண‌க்க‌த்துக்கு வ‌ழி வ‌குக்கும் என்று எழுதி இருக்கிரோம்.

ஆனால்  "இராம‌ இராம‌ ஜெய‌ இராஜா இராம்'' என்ற‌ த‌லைப்பில் க‌ட்டுரை வெளியிட்ட‌வுட‌ன் நாம் இந்தியாவில் இராம‌ இராஜ்ஜிய‌ம் அமைய‌ வேண்டும் என்ற‌ க‌ருத்து உடைய‌வ‌ரோ என்கிற‌ எண்ண‌ம் சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு வ‌ந்திருந்தால் அதை விள‌க்க் வேண்டிய‌து ந‌மது க‌ட‌மை ஆகும்!

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து இந்து ம‌த இராஜ்ஜிய‌ம் என்ப‌தாக‌வோ, ச‌ங்க‌ ப‌ரிவார‌ இய‌க்க‌ங்க‌ளின் ம‌த‌க் கோட்பாடுகளை செய‌ல் ப‌டுத்தும் இராஜ்ஜிய‌மாக‌வொ இருந்தால் , அப்ப‌டிப்ப‌ட்ட‌ இராம‌ இராஜ்ஜிய‌ம் வேண்டாம்.

ஆனால் இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து உண்மையில் என்ன‌?
 இராம‌ர் எந்த‌ ஒரு ம‌தத்தையும் தோற்றுவிக்க‌வொ, பிர‌ச்சார‌ம் செய்ய‌வோ, அந்த‌ ம‌தம் ம‌ட்டுமே இவ்வுல‌கில் இருக்க‌ வேண்டும் என்று சொல்லிய‌தாக‌வோ  இல்லை.

இராம‌ர் வாழ்க்கையில் ப‌ல்வேறு துன்ப‌ங்க‌ளை உருவாக்கி, அவருடைய‌ முக்கிய‌ அரசிய‌ல், போர்க்க‌ள‌ எதிரியாக‌ செய‌ல் ப‌ட்ட‌ இராவ‌ண‌ன் இந்து ம‌த‌த்தை (அக்கால‌த்தில் ச‌னாத‌ன‌ த‌ர்ம‌ம் என‌ அழைக்க‌ப் ப‌ட்ட‌)  சேர்ந்தவ‌ராக‌, அதுவும் பார்ப்ப‌ன ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்திருக்கிறார். நான்கு வேத‌ங்க‌ளையும் கற்று, ப‌ல‌ யாக‌ங்க‌ளையும், த‌வ‌ங்க‌ளையும் செய்த‌வ‌னாக‌ இருந்திருக்கிரான் இராவ‌ண‌ன்.

இராம‌ர் ஆட்சி செய்த‌ போது ம‌க்க‌ளிட‌ம் மிக‌வும் ப‌ரிவுடைய‌ ஒரு ம‌க்க‌ள் ந‌ல‌ ஆட்சியை த‌ந்து இருக்கிரார் என‌ சொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌து. 14 வ‌ருட‌ம் காட்டிலே வ‌சித்த‌  இராம‌ன்,ம‌க்க‌ளுக்கு அதிக‌ வ‌ரிக‌ளைப் போட்டு, தான் ஆட‌ம்ப‌ர‌த்திலே திளைக்க‌வில்லை, ம‌க்க‌ள் ந‌ன்மைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தான். ம‌க்க‌ள் வ‌ருத்த‌ப்ப‌ட்டால், அதை பார்த்து தான் வ‌ருத்த‌ப் ப‌ட்டான் இராம‌ன், ம‌க்க‌ள் மகிழ்ச்சி  அடைந்த‌  போது அதைக் க‌ண்டு தான் ம‌கிழ்ச்சி அடைந்தான். இவ்வாறு  குடி ம‌க்களை த‌ன் த‌ந்தையாக‌, ச‌கோத‌ர‌ராக‌... க‌ருதி ஆட்சி செய்து இருக்கிறான், என்று சொல்லிகின்றன‌ர்.
ம‌க்க‌ளும் இராம‌னை த‌ங்க‌ள் ம‌க‌னாக‌  எண்ணின‌ர்.


த‌ச‌ர‌த‌ன் வாழ்ந்த‌ கால‌த்திலே, அவர் முத‌லில் இராம‌னுக்கு ப‌ட்ட‌ம் க‌ட்ட‌ முடிவு செய்த‌ போது, பொது ம‌க்க‌ள் எப்ப‌டி ம‌கிழ்ந்த‌ன‌ர் என்ப‌தை க‌ம்ப‌னின் வ‌ரியிலே

//மாத‌ர‌ர் வ‌ய‌தின் மிக்கார் கோச‌லை ம‌ன‌தை ஒத்தார்,

         வேதிய‌ர் வ‌சிட்ட‌னின் ம‌ன‌தை ஒத்தார்,

வேறுள‌ மாந்த‌ர் எல்லாம் சீதையின் ம‌ன‌தை ஒத்தார்,

              அன்னாள் திருவினை ஒத்தார்//

என‌ உள்ள‌து.

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்கிற‌ வாச‌கத்தை முத‌லில் நான் கேள்விப்ப‌ட்ட‌து காந்தியின் எழுத்துக்க‌ளில் இருந்துதான். காந்தியிட‌ம் இராம‌ரின் தாக்க‌ம் அதிக‌ம் உண்டு என‌ நினைக்கிறேன்.

இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து ந‌வீன‌ இந்தியாவில் சிந்த‌னையாள‌ர்க‌ள் மத்தியில் பிர‌ப‌ல‌மாவ‌தற்க்கு கார‌ண‌ம் காந்திதான்.

ஆனால் எண்ப‌துக‌ளில் இந்த‌ இராம‌ இராஜ்ஜிய‌ம் என்கிற‌ வாச‌க‌மான‌து, பி.சே.பி, ஆர். எஸ். உள்ளிட்ட‌ பரிவார‌ அமைப்புக‌ளால் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.
ஆறாம் வ‌குப்பு ப‌டிக்கும் போது ஆர். ஏஸ். ஷாகாக்க‌ளை வேடிக்கை பார்ப்பேன். காவி கொடியை ஒரு கொடிக் க‌ம்பத்தில் ந‌ட்டு வைப்பார்க‌ள். காக்கி டிர‌வுச‌ர் அனிந்த‌ ஒரு குருஜி விளையாட்டுக‌ளை சொல்லிக்  கொடுத்த‌தைக் க‌வ‌னித்து இருக்கிறேன். காவிக் கொடியை ஏற்றி, ஹிம்ம‌த்து அப்னி, தாஅக்க‌த்து அப்னி, அப்னா வீர‌ ஜ‌வான் ...என்று பாடுவார்க‌ள்.

ஆனால் அவ‌ர்களுக்கும் இராம‌ இராஜ்ஜிய‌த்துக்கோ குறிப்பிட்ட‌ தொட‌ர்பு எதுவும் இருப்ப‌தாக‌ என‌க்கு தோன்றிய‌தில்லை.

ஆனால் எண்ப‌துக‌ளில் போப‌ர்ஸ் ஸ்கேண்டலினால் ராஜீவ் காந்தி க்கு  ம‌க்க‌ளிட‌ம் செல்வாக்கு குறைந்த‌ கால‌த்திலே, அர‌சிய‌லில் முன்னுக்கு வ‌ர‌ பி.செ.பி. இராம‌ரை முழுமையாக உப‌யோகித்தது.

எந்த‌ ஒருவ‌ர்  த‌ன்னுடைய‌ ப‌த‌வி, வீடு, ந‌க‌ர‌ம், ம‌க்க‌ள் எல்லாவ‌ற்றையும் விட்டு விட்டு காடு சென்றாரோ, அவ‌ருக்கு இருந்த‌ செல்வாக்கு, புக‌ழ் , ப‌க்தி அனைத்தையும் தான் ப‌த‌வியைப் பிடிக்க‌ உப‌யோகித்துக் கொண்டன‌ பி.சே.பியும், ப‌ரிவார‌ இய‌க்க‌ங்க‌ளும் !


இதனால் இராம‌ இராஜ்ஜிய‌ம் என்றால் பி.சே.பி ஆட்சி அல்ல‌து இந்து ம‌த‌ ஆட்சி என‌ எண்ணும்ப‌டி ஆகி விட்ட‌து.


என‌வே முத‌லில் த‌ன்னுடைய‌ சிற்ற‌ன்னை கைகெயியாலும்,பின்னர் இராவ‌ண‌னாலும் , அத‌ன் பின்ன‌ர் சில‌ராலும் ப‌ல்வேறு இன்ன‌ல்களை அடைந்த‌ போதும், அவ‌ற்றை பொறுமையாக‌ ஏற்ற‌  இராம‌னின் கோட்பாட்டுக்கு ந‌ம்முடைய‌ கால‌த்திலே ஏற்ப‌ட்ட‌ சோத‌னை என்ன‌வென்றால், பி.சே.பி ஆட்சி தான் இராம‌ இராஜ்ஜிய‌ம் என்ப‌து போல‌ ஒரு க‌ருத்து உருவான‌துதான்.

(தொட‌ரும்)

No comments:

Post a Comment