Sunday, January 16, 2011

குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் என்ன? – காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பட்டி மன்றம்!

அன்புக்குரிய நண்பர்களே….. நலந்தானே ….. இது பட்டி மன்றம், நல்லா சிரிங்க,  அப்பப்ப கை தட்டுங்க..

இந்திய சமூகத்தின் அடிப்படை குடும்பமே.  குடும்பங்களே இந்திய சமுதாயத்தை உருவாக்குகின்றன. ”நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” அப்படின்னு சொல்லி இருக்கங்க. எனவே குடும்பங்கள் சிறப்படைந்து அதிக வளமையும் செல்வாக்கும் பெற்றால் நாடு முன்னேறும்.


எனவே இன்றைய பட்டி மன்றத்திலே  5 அணிகள் கலந்து கொண்டு சொற் போர் ஆற்ற இருக்கிறார்கள்.


என்னய்யா, தூங்கிடாதீங்க… தூங்கினா  நான் அப்பப்ப கடி ஜோக் அடிப்பேன்.
மேலும் இது இணைய தள  பட்டி மன்றம் ஆதலால் கொஞ்சம் வித்யாசமானது. தலைப்பை  மட்டும்   தான் நாங்க சொல்லுவோம்.  எந்த தலைப்பு உங்களுக்கு சரின்னு தோணுதோ அந்த தலைப்பின் சார்பாக நீங்களே வாதத்தை முன் வைக்கலாம். எவ்வளவு ஜனநாயகம் பாருங்க.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப அங்கத்தினர்கள் நிறைய பணம் சம்பாரித்து வளமையாக இருப்பதே!என்ற தலைப்பை வலியுறுத்தி கம்பன் அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதே! என்ற தலைப்பை வலியுறுத்தி இளங்கோ அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப தலைவர் பிற குடும்பங்களுடன் நட்பை உறுதியாக வைத்திருப்பதாலேயே! என்ற தலைப்பை வலியுறுத்தி பாரதி அணியினர் பேசலாம்.


 குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு இலவசங்கள் வழங்கப்  படுவதாலேயே!என்ற தலைப்பை வலியுறுத்தி வள்ளுவர் அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப அங்கத்தினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதே! என்ற தலைப்பை வலியுறுத்தி பாரதிதாசன் அணியினர் பேசலாம்.

முக்கிய குறிப்பு: இந்த பட்டி மன்றம் பொதுவாக  இந்திய குடும்பங்கள், தங்களை வளர்ச்சி அடைய செய்வது பற்றிய காரணங்களை அலசும் பட்டி மன்றம். இது எந்த தனிப் பட்ட குடும்பத்தையோ, சில குடும்பங்களைப் பற்றியோ ஆராயும் பட்டி மன்றம்  அல்ல. இதை உணர்ந்து நண்பர்கள் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காத்து பின்னூட்டங்கள்  மூலம்  சொற்போர் ஆற்றலாம்.  ஒரு சிலரைக் குறிப்பிட்டு  கருத்து சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.  (யாரும் உரை ஆற்ற வராவிட்டாலும் நாங்க ஈ ஒட்டி விட்டு எழுந்து செல்வோம்)!


Title: குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் என்ன? – காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு   பட்டி மன்றம்!

Saturday, January 15, 2011

மந்திரத்தில் மாங்காய் விழாது - சங்கராச்சாரியார் அதிரடி !

இந்து மதம் ஆழமான ஆன்மீக சிந்தனைகளையும் , விரிவான பல ஆன்மீக முன்னேற்ற முறைகளையும் உடையது.


தனக்கு எதுவுமே வேண்டாம் என்று காட்டுக்கு சென்று கனிகளையும், கிழங்குகளையும் உண்டு தவம் செய்யும் சித்தனும் இந்துதான், அவ்வப் போது கோவிலுக்கு சென்று வழிபடுபவனும் இந்துதான். எந்த வழிபாடும் செய்யாவிட்டாலும், யாருக்கும் தீங்கு நினைக்காமல், யாரையும் ஏமாற்றாமல், தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று இருப்பவனும் இந்துதான். இந்து மதம் ஒருவன் தன் கடமைகளை சிறப்பாக செய்தால் அதுவே சிறந்த ஆன்மீக முயற்சி என்கிறது. தியாகம், தியானம், தவம், பக்தி, யோகம்… இவ்வாறாக பல ஆன்மீக முறைகளை முன் வைக்கிறது.இவற்றில் ஒரு முறைதான் யாகம் அல்லது வேள்வி.


அவரவர்க்கு பொருத்தமானதை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்.


இந்து மதத்தின் மந்திரங்களில் இரண்டு வகை உண்டு.

ஒன்று அறிவைத் துலக்கி உண்மையை  தேடும் ஆராய்ச்சி, அவற்றில் கண்டுணர்ந்த முடிவுகள் ஆகியவற்றின் தொகுப்பான உப நிடத மந்திரங்கள்.


உதாரணமாக,
  உண்மையே  வெல்லும் - ”சத்யமேவ ஜெயதே”"என்பது முண்டக உபநிடதத்தின் ஒரு வாக்கியம் ஆகும்.


உத்திஸ்டத,  ஜாக்கிரத, பிராப்யவரான்   நிபோதித”  – (எழுமின்,  விழிமின், குறி சேரும் வரை நில்லாது செல்மின்”) என்பது கட உபநிடத வாக்கியம்  ஆகும்.


இன்னொரு வகையான மந்திரங்கள் மக்கள நலனை முன்னிட்டும், சொந்த விருப்பத்தின் காரணமாகவும் தேவர்களை  நோக்கி வேண்டப்படுவதாக அமைந்து உள்ளது. இவைகள் யாகத்தின் போது சொல்லப் படுகின்றன.
யாகம் என்பது பெரும்பாலும் அரசர்களால் செய்யப் படுவது. யாகத்தின் போது ஏழை எளியவர்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குதல் முக்கிய மாக வற்புறுத்தப் பட்டுள்ளது. தானம் இல்லாத யாகம் வீண் என்று சொல்லி உள்ளனர்.

இந்துக்களின் அடிப்படையான புனித நூல்கள் ரிக், யஜூர், சாமம் , அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், மற்றும்பகவத் கீதை உள்ளிட்ட ஸ்ருதி எனப் படுபவை ஆகும்.

ஒவ்வொரு வேதத்திலும்,  யாகங்களை செய்ய வேண்டிய முறைகள் அவற்றை செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஆகியவை தெளிவாக விளக்கப் பட்டு உள்ளன.

உலகின் முதல் வாக்கியம் என்று ஜெர்மானிய அறிங்கர் மாக்ஸ் முல்லரால்  சொல்லப் பட்ட,  அக்னி மீலே புரோஹிதம்” என்று தொடங்கும் ரிக் வேதத்தின் முதல் செய்யுள், இந்த வேள்வி மந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


வேதங்களின் முடிவுப் பகுதியான வேதாந்தம், மனித வாழ்க்கை, மனித உயிர், அது விடுதலை பெற்ற நிலையை அடையும் முறைகள் ஆகியவற்றை பற்றிய ஆராய்ச்சிகளும், அறிவிப்புகளும் உள்ளன.
வேதங்களை கற்பதும், ஓதுவதும், பிறருக்கு பயிற்று விப்பதும், இந்து மதத்திலும் முக்கிய செயலாக இருந்தது. 

வேதங்களை தொடர்ச்சியாக சரியான ஓசை மற்றும் இசை நயத்துடன் உச்சரிக்கும் போது, அவை கேட்போருக்கு மனதிலே ஆன்மீக உணர்வை வூட்டுவதாக இருந்தது.

காலப் போக்கில்   வேதங்களை படித்து மந்திரங்களை சரியாக உச்சரித்தால் போதும் என்கிற எண்ணம் பலரின் மனத்தில் தோன்றி இருந்தது.
மந்திரங்களை  உச்சரித்தால் போதும், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் தீரும் என்று எண்ண ஆரம்பித்தனர்.


ஆனால் ஆதி சங்கரர் அது போதாது என்பதை அறிந்து கொண்டார்.  ஒருவர்  தன் மனதில் ஆசைகளை  குறைத்துக் கொண்டே வந்து , மனதிலே அமைதியை  நிலவச் செய்து, தன்னுடைய உண்மை நிலையை அறிவதாலேயே துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார்.


எனவே வெறுமனே மந்திரங்களை உச்சரித்து மங்களம் பாடினால் ஒருவன் காக்கப் பட மாட்டான் என்பதை குறிக்கும் விதமாக “‘நஹி நஹி ரக்ஷதி,  டுக்ருங் கரனே”  என்று பாடினார் சங்கராச்சாரியார்.


உபநிடத வாக்கியங்களான
அசத்தோமா சத் கமய , (From untruth to tuth / from illusion to truth)
தமசோமா ஜ்யோதிர்கமய ( From darkness to light )”" 
போன்றவை குறிக்கோளை உணர்த்தும், மக்களின் அறிவைத் தூண்டும் வாக்கியயங்கள், அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியில் நாம் செல்ல வேண்டும், வெறுமனே அவற்றை உச்சரித்தால் போதாது என்பதை அதிரடியாக தெளிவு படுத்தி இருக்கிறார் சங்கராச்சாரியார்.


நன்கு வேதங்களையும் கற்று தேர்ந்தாலும், அவற்றில் சொல்லப் பட்டுள்ள மந்திரங்களி, தெளிவாக பிழை இல்லாமல் உச்சரித்தாலும் அவை எல்லாம் ஒருவனைக் காக்காது. சிறு வயதில் குழந்தையாகவும், பின்னர் இளைங்கனாகவும், பின்னர் முதியவனாகவும்… இப்படி தன் நிலைமை  மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதன் தன்னை அரசனாகவோ , ஆண்டியாகவோ  கருதிக் கொண்டாலும் கடைசியில் பிடி சாம்பலாகிறான் அல்லது மண்ணுக்குள் மக்குகிறான்.

எனவே எத்தனை வேதங்களை கற்றாலும், இன்ப  துன்பங்களை சமமாக என்னும்  மன நிலையை அடையும்  படிக்கு ஒருவன்  தன்  சிந்தனை , சொல், செயல்  பக்குவப் பட்டு உயர் மன  நிலையை  அடைவதே அவன் விடுதலை அடைவது ஆகும் என்கிற கோட்பாட்டையே சங்கராச்சாரியர் சொல்லுகிறார். புத்தரும் அதே கோட்பாட்டையே சொல்கிறார்.

 புத்தருக்கும் சங்கரருக்கும்  உள்ள  வித்யாசம்( on philosophical terms) என்ன வென்றால், விடுதலை அடைந்த பின் அந்த உயிரின் நிலை என்ன என்பது பற்றியே- புத்தர் விடுதலை அடைந்த பின் ஒன்றுமில்லை, சூனியம் தான், கஷ்டம் தீர்ந்து விட்டது அப்புறம் என்ன என்கிறார், ஆதி சங்கரர் அந்த உயிரின் நிலை விடுதலை பெற்ற, அழிவற்ற , துன்பங்கள் இல்லாத நிலையிலே தொடர்ந்து உயிரோடு இருப்பதாகவும், தன்னுடைய உண்மை நிலையை அந்த உயிர் அறிந்ததாகவும் – எல்லா உயிரும் உண்மையில் அழிவற்றதாக அளவற்ற வலிமை உடையதாக வேறுபாடில்லாமல் ஒன்றாகவே இருப்பதாகவும் சொல்கிறார்.


உண்மையை உணர்ந்து   விடுதலை அடையாத  உயிர், மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து தொடர்ந்து துன்பத்தில் உழல்வதாக  கிட்டத்தட்ட இந்து மத ஞானிகள்   அனைவரும் சொல்லுகின்றனர்.

இந்தக் கோட்பாடு இந்து புத்த, சமண மதங்களின் மையக் கோட்பாடாக,  தத்துவ இணைப்புக் கோட்பாடாக உள்ளது.

காசியில் ஒரு வேத பாடசாலையில் பண்டிதர்களுடன் விவாதித்து விட்டு வெளியே வரும் போது வேதம் படித்த ஒருவர் “‘டுக்ருங் கரனே”" என்னும் சமஸ்கிருத இலக்கிய பத்தை திரும்ப திரும்ப சொல்லி மனப் பாடம் செய்து கொண்டிருப்பதை கண்டார்.


இக்காலத்திலும் நாம் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி யை உரு அடித்து அப்படியே அடி மாறாமல் எழுதி நிறைய மதிப்பெண் பெறுகிறோம் அல்லவா. ஆனால் வெறுமனே உரு அடிப்பது உபயோகம் இல்லை. அதைப் புரிந்து கொள்வதும் அடுத்த நிலையே. சோதனை சாலையில் அந்த பரிசோதனையை செய்து சரி பார்ப்பது, தானே ஆராய்ச்சின் முடிவை அறிந்து கொள்வது இவையே ஒருவனை அறிஞன்  ஆக்கும் அல்லவா.


அதைப் போல மந்திரங்களை உச்சரித்தால் போதும், அந்த மந்திரங்கள் தங்களைக் காக்கும் என்கிற நினைப்பை மாற்றி, கனவில் இருந்து எழுப்பி, ஒருவன் தன்னைத் தானே உயர்த்தி மனதை வலிமை பெறச் செய்து உண்மையை அறிய வேண்டும் என்கிற  பகுத்தறிவுப் பாதைக்கு அவர்களை கொண்டு வந்த சங்கராச்சாரியார் உண்மையில் ஒரு அதிரடி புரட்சிக்காரரே!

Thursday, January 13, 2011

நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்!

  தமிழ் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்று பொங்கல். தமிழ் சமுதாயம் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  சரி, அது தமிழ் நாடோ, ஈழமோ, சிங்கப்பூரோ, தென் ஆப்பிரிக்கவோ, அமெரிக்கவோ, பிஜியோ.... எங்கிருந்தாலும் தமிழ் சமுதாயம் இருந்தால் அங்கே பொங்கலும் இருக்கும்

 பொங்கலின் பரிமாணங்கள் பல.  


சிறு வயதில் பொங்கல் பண்டிகை என்றால் வூரே களை கட்டுவதைப் பார்த்து இருக்கிறேன். எல்லோரும் கடைத் தெருவுக்கு வந்து மஞ்சள், கரும்பு, வாழை, புதுப் பானை .. இவற்றை வாங்கி கொண்டு தெருவில் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.


எனக்கு சர்க்கரைப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்கு வெளியிலே தான் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல்"என்று கத்துவோம். பொங்குகிற நேரத்திலே வேறு ஏதாவது விளையாட்டுக்கு போய் விட்டு, "'பொங்கலோ பொங்கல்' என்று கத்தாமல் விட்டு விட்டால் அப்புறம் ரொம்ப நாளைக்கு பீலிங்ஸா இருக்கும்.


பொங்கல் அன்று படையல் எல்லாம் போட்டு சாப்பிட்டு விட்டு  கரும்பையும் அன்று தின்றே ஆக வேண்டும். இதை எல்லாம் முடித்து விட்டுமெதுவாக நண்பர்கள் வீட்டுக்கு உலாவ  போவாம்.  நண்பன் அம்மா கண்ணில் மாட்டினால் அவ்வளவுதான். கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டு தான் போகணும் என்பார்கள்.. வீட்டில சாப்பிட்டோம் மா... என்றால் கேட்க  மாட்டர்கள். வற்புறுத்தி உண்ண வைப்பார்கள். எத்தனை நண்பர்கள் வீட்டில் சாப்பிட முடியும்?

பொங்கலின் முக்கிய பரிமாணங்களில்  ஒன்று பொங்கல் வாழ்த்துக்கள். வண்ண மயமான வாழ்த்து அட்டைகள். அவற்றை முகர்ந்தால் ம்... ம்....எவ்வளவு வாசனை. எல்லா கடவுள்களின் படத்தையும் பொங்கல் வாழ்த்தாகப் பார்க்கலாம். அதோடு நடிகர்களின் படம் வேறு, எம். ஜி.ஆர் , சிவாஜி படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள் முன்பு பிரபலம். அதிலே சொர்க்கம் படத்தில் சிவாஜி "பொன்மகள் வந்தால் படத்தில் பணக் காசுகளுக்கு நடுவில் புரளும் படத்தை போட்டு,  தங்க காசுகளை அப்படியே கொஞ்சம் விளிம்பிலே வெட்டி  3D எபக்ட் கொடுத்து இருப்பார்கள்எனக்கு விஜய் ஸ்ரேயா நடித்த  ரி- மிக்ஸ் - பொன் மகள் வந்தால்  பாட்டைக் கேட்கும் போது அந்த பொங்கல் வாழ்த்தின் நினைவுதான் வரும். சிறுவனாகவே இருந்திருக்கக் கூடாதா, வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்

நண்பர்கள்  அனைவருக்கும்  பொங்கல் வாழ்த்துக்கள்.

மேலும் இந்த புத்தாண்டு அரசியலில் நான் இறங்க விரும்பவில்லை. இத்தனை நாள் கழித்து வந்த ஞானோ தயமாக தமிழ் புத்தாண்டை பொங்கலோடு இணைத்து இருக்கிறார்கள்நாளைக்கு ஆட்சி மாறினால் திரும்பவும் மாற்றுவார்கள்இவரகளின் அரசியலில் நாம் இறங்கக விரும்பவில்லை. பின்பற்றுவதோ  கிரிகோரியன் கேலண்டர் எனப் படும் ஐரோப்பிய கால ஆண்டு அட்டவணையை. எப்படியோ இவர்களின்  அரசியல்,  பொங்கலின் மகிழ்வை கெடுக்க நான் விரும்பவில்லை.

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்.  

Wednesday, January 12, 2011

தைரியமாக இரு, எழுந்து நில், நீ வலிமை உடையவன்! உனக்குத் தேவையான எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது



தைரியமாக இரு, எழுந்து நில், நீ வலிமை உடையவன்! உனக்குத் தேவையான எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது”- சோர்வுற்ற , கஷ்டப்பட்ட, வாய்ப்பிழந்த அப்பாவியின் நண்பன், ஆசான் சுவாமி விவேகானந்தர்.  


                     
            
          
                         

இந்தியர்களின்   தன்னம்பிக்கையை  வலுவடைய செய்த சுவாமி விவேகானந்தரின் 150௦ ௦ வது  பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று துவங்குகின்றன. இந்திய அரசு  ஒரு குழுவை அமைத்துஅதன் தலைவராக மாண்புமிகு பிரதமரே அமர்ந்து இருக்கிறார்


 சுவாமி விவேகானந்தர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். இந்தியாவிற்கு வெளியே மத நல்லிணக்கம் என்கிற கோட்பாட்டை  அறிமுகம் செய்தவர் சுவாமி விவேகானந்தரே. எல்லா மதங்களையும் அங்கீகரித்து, எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல் பட முடியும் என்பதை எடுத்துக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தர் சாதாரண பிட்ச்சாண்டி துறவியாகவே தமிழகம் வந்தார். அவரை சரியாக அடையாளம் கண்டு அமேரிக்கா செல்ல உதவியது தமிழகத்தில் இருந்தவர்களே. அவர் அமெரிக்காவில் கொண்டு போன பணம் எல்லாம் செலவான நிலையில், "குளிராலோ , பசியாலோ நான் இங்கு இறக்க நேரிடலா, ஆனால் இந்தியாவில் வாழும் கோடி மக்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று எழுதினார். "பிச்சை எடுப்பதற்காக தெருவுக்கு சென்று இருந்தால் அமெரிக்காவில் சிறை வாசமே என் முடிவாகி இருக்கும்" என பிறகு குறிப்பிட்டார். அந்த நிலையில் அவருக்கு பணம் அனுப்பி உதவியது சென்னையில் இருந்தவர்களே.


சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கைக் கருத்துக்களை, பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை  மத நல்லிணக்கக் கோட்பாட்டை விளக்குவதில் பரப்புவதில் தமிழகம் என்றும்  முன்னணியில் நிற்கும்.


            
                                     

Tuesday, January 11, 2011

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இராமாயண ஆய்வு!

எந்த அளவுக்கு சமீபத்தில் நடந்ததோ அந்த வரலாற்றை எளிதாக கணிக்க இயலும்.  எந்த அளவுக்கு பழமையாக உள்ளதோ அந்த அளவுக்கு வரலாறு கணிக்க கடினமாக உள்ளது.


வரலாற்றை அறிவியல் போலத் திண்ணமாக கணிக்க இயலாது. வரலாறு  என்பது அந்தந்த கால கட்டத்தில் எழுதப் பட்ட நூல்கள், அகழ்வாராய்ச்சியில்  கிடைத்த சான்றுகள் ஆகியவற்றின் மூலம் வூகிக்கப் பட்டு எழுதப்  படுவதே.

                  File:AdamsBridge02-NASA.jpg

இந்திய வரலாறு மிக தொன்மையானது. இந்திய வரலாற்றை புத்தருக்கு முன் புத்தருக்கு பின் எனப் பிரிக்கலாம். ஏனெனில் புத்தரின் காலம் கி.மு 563   ஆகும்.  ஏனெனில்  அலக்சாண்டர் இந்தியாவின் மேல் படை எடுத்த காலம் கி.மு. 326   ஆகும். புத்தருக்கு பின் ஏறக் குறைய 150  வருடங்களுக்குப் பின். புத்தருக்கு  பிந்தைய வரலாறு மேலை நாட்டினரால்  பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. புத்தருக்கு முந்தைய வரலாற்றை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.


புத்தருக்கு முந்தைய கால கட்டத்திலே   இந்திய சமுதாயம் பண்பாட்டிலும் , நாகரீகத்திலும் வளர்ச்சி அடைந்து செல்வச் செழிப்பு உள்ள நாடாகவே இருந்திருக்கிறது. சிந்து, கங்கை முதல் காவிரி வரை பல நதிகள் இந்தியாவில் வளமைக்கு உதவியுள்ளன.
இப்போது நாம் காணும் இராமாயணம் பண்டைய இந்தியாவில் நடை பெற்ற வரலாற்று நிகழ்வா என்பதே நம்முடைய ஆராய்ச்சிப் பொருள்.

இராமாயணமும், அதற்குப் பிறகு எழுதப் பட்ட மகாபாரதமும் புனைவு என்று சொல்லி விடுவது
எளிதான விடயம்.  நடந்து இருக்கக் கூடுமா என்பதே ஆய்வு.
இராமாயணம் வரலாற்று நிகழ்வாக இருந்திருக்க கூடும் என்பதற்க்கான வாய்ப்புகள் என்ன?

இராமாயண கால கட்டத்திலேயே எழுதப் பட்டதாகக் சொல்லப் படும்  வால்மீகி இராமயணம்  ஒரு நூல் ஆதாரமாக உள்ளது.




இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாலம் போன்ற பகுதியானது இராமயணத்தில் சொல்லப் பட்ட பாலமாக இருக்கக் கூடுமா என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்று. இது பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப் பட வேண்டும் என்று நீதி மன்றங்கள் சொல்லி உள்ளன. ஆனால் அரசாங்கம் அதை ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை.


இராமயணத்தில் சொல்லப் பட்டுள்ள நிகழ்வுகள் பலவும் இயற்கயான நிகழ்வுகளாகவே உள்ளன. இராமன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். எந்த ஒரு அதிசத்தையும் இராமன் நிகழ்த்தியதாக இல்லை. கடலை இரண்டாகப் பிளந்து நடுவிலே நடந்து செல்வது போன்ற அதிசய நிகழ்வுகள் எதுவும் இல்லை. கடலைக் கடக்க பாலம் அமைத்து சென்றதாக உள்ளது.


இராமயணத்தின் முக்கிய அம்சமான வானரங்கள் என சொல்லப் படுபவை குரங்கில் இருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையும் கட்டத்திலே இடைப் பட்ட கட்டமாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

                 

 மொத்தத்திலே இராமயணம் ஒரு புனைவாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன, இராமாயணம் உண்மையில்  நடந்த  நிகழ்வாக இருக்க அதை விட வலுவான வாய்ப்புகள் உள்ளன.

Monday, January 10, 2011

குரு பக்த சிரோன்மணிகளே .. உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால்......

குரு இருந்தால் நல்லதுதான். தகுதியான குரு கிடைக்கும் போது அவரை விட்டு விட்டு செல்வது , பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் பானையை உடைத்தது போலாகும்!

ஆனால் குரு என்ற  ஒருவர் இருந்தே  ஆக வேண்டும் என்பது இல்லை. தீவிரமான வைராக்கியம் உள்ள யாரும் அப்படியே சந்நியாசி ஆக விடுவான், இந்த உலகப் பொருட்கள் , சொத்து, சுகம் உட்பட எதுவும் தன்னைக் காக்க வராது, காக்கவும் அவற்றால் முடியாது என்பதை திண்ணமாக மனதில் பதிந்தவனுக்கு அப்போதே சன்யாசம் தான். 

குரு  சன்யாசம் குடுத்தாலும்,  வாழ்க்கையின் கூறுகளை ஆராயாதவன் சந்நியாசி ஆனாலும் மறுபடியும் ஆசை வலையில் விழுந்து விடுவான்.

விவேகத்தினால ஏற்பட்ட வைராக்கியம்- அறிவினால் உண்டான மன உறுதிதான் ஒருவனை சன்யாசி ஆக மாற்றுகிறது.

சகஸ்ர நாமம் கற்றுக் கொள்ள கூட குரு வேண்டும் என்றால், உபநயனத்தின்  போது குரு சொல்லி, தந்தை   காயத்ரி  மந்திரத்தை சொல்கிறார். குருவும் அந்த மந்திரத்துக்கு அர்த்தம் சொல்வது இல்லை. தந்தையும் சொல்வது இல்லை. குரு தக்ஷினையை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார்.  காயத்ரி மந்திரத்துக்கான அர்த்தத்தை புத்தகத்தைப் பார்த்துதான்  பலரும் அறிந்து கொள்கின்றனர்.  
 மனதிலே உண்மையை  தெரியச் செய்யும் ஒளியை வேண்டி, அந்த ஒளிதான் முக்கியமானது என்று அதைத் தவிர வேறு எதையும்  எண்ணாமல்  காயத்ரி மந்திரத்தை மனக் குவிப்புடன் சொன்னாலேதான் ஆன்மீக முன்னேற்றம் சாத்தியமாகும். வெறுமனே அர்த்தம் தெரியாமல் ,  'குரு' சொன்னது போல மந்திரத்தை ஒப்பித்து விட்டு போனால் பலன் கிடைக்குமா?  இதைத்தான்   சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்)  நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரனே என்றார் .

குரு குரு என்று ஓவர் ஹைப் குடுப்பதால் கார்ப்பரேட் குருமார்கள் என்று சொல்லப் படுபவர்க்ளுக்குத் தான் லாபம், அதோடு அவர்களை சுற்றி சுற்றி வந்து சேவை செய்யும் முக்கியஸ்தர்களுக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்கும். -  நஷ்டம்,  இந்து மதத்திற்குத்  தான்.
  குரு பக்தி  என்ற  பெயரிலே "குரு இருந்தால்தான்" என்று குருவுக்கு ஹைப் குடுப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைக் காப்பதே பெரும்பாடாக உள்ளது. 

 கடந்த முப்பது நாற்பது  வருடத்தில் இப்படி குரு ஹைப் குடுத்தே  பில்லியநேர் குருக்களையும் உருவாக்கி இந்து மதத்தை  பின்னடைவு அடைய வைத்து விட்டனர். 

அப்பாவி  பாமர மக்களின் அமைதியான கடவுள்  பக்தியே இப்போது இந்து மதத்தைக் காத்து நிற்கிறது.
நல்ல குரு இருந்தால் வரட்டும். இல்லையேல் குரு இல்லாமலே இருக்கலாம்.

ஆதி சங்கரர் , இராமானுஜர், மத்வர் இவர்கள் காலத்துக்கு அப்புறம் எந்த குரு வந்து மக்களை வழி  நடத்தினார்கள்? மக்களுக்கு எந்த குருவையும் தெரியாது.
புத்த மதத்தால் அப்புறப் படுத்தப் பட்ட கடவுள்களை ஆதி சங்கரர் மீட்டுக் கொடுத்து எல்லோரும் வழி பட செய்தார். அதை வைத்தே ஆயிரம் வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இன்னும் பல்லாயிரம் வருடம் அப்படியே நடக்கும். 

சுவாமி விவேகானந்தர்  வந்து  மேலை  நாட்டினருக்கு இந்து மதம் ஒரு சிறப்பான மதம் என்பதை அறியச்  செய்து,  இந்து மதத்தின் மீது போடப்பட்ட  குப்பைகளை நீக்கி, மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார். 

அது போல நல்ல குருக்கள் வருவதானால் வரட்டும். இல்லையானால் யாரும் வேண்டாம், மக்களே பார்த்துக் கொள்வார்கள். 

குரு துதி பாடி ஹைப் குடுத்து பேரையும் புகழையும் உருவாக்கி கீழே விழும்போது பாதிப்பு  இந்து மதத்திற்கு தான்.  

மரியாதைக்குரிய குரு பக்த  சிரோன்மணிகளே, நீங்கள் இந்து மதத்திற்கு நல்லது  செய்வதாக நினைத்துக் கொண்டு  குரு அவசியம் என நினைத்து, இப்படி  அவ்வப் போது யாரையோ  பிரபலமான குருவாக்கி  இந்து மதத்தைக் காயப் படுத்தாமல் இருந்தால் போதும். இந்து மதம் அதன் பாட்டிலேயே சிறப்பாக செல்லும். 

ஆன்மீகம் என்பது என்ன?

மனிதனை விடுதலை அடைந்தவனாக , முழு சுதந்திரம் உடையவனாக, எந்த ஒரு துன்பமும் தன்னை வருத்தாத மன  நிலையை அடைந்தவனாக, தன் எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் வலிமை உடையவனாக உயர்த்துவது எதுவோ, அதுவே ஆன்மீகம்.


இதை நாம் சொல்கிறோம் என்றால் அதற்க்கு முன்பாகவே நாம் தீர்மானித்து என்ன என்றால் – எல்லா உயிர்களும் அடிமை நிலையிலே, தங்கள் நிலையை, எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வலிமை இல்லாதவராக, பல வகையான துன்பங்கள்  தங்களை வந்து தாக்கும் நிலையிலே  உள்ளனர் (prone to sorrow) என்பதாகும்.

எல்லா உயிர்களையும் பீடித்துள்ள மூன்று முக்கிய துன்பங்கள், பிணி,   மூப்பு, சாக்காடு ஆகியவை.
இந்த‌ சாவு, நோய் ஆகிய‌ பிர‌ச்சின‌க‌ள் ம‌ட்டும் அல்லாம‌ல் இன்னும் எத்த‌னையொ பிரச்சினைக‌ள் ந‌ம்மை வ‌ந்து தாக்குகின்றன.
 வாய்க்கால் , வரப்பு தகராறு, பையனுக்கு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை, நன்கு வேலை செய்தும் அலுவலகத்தில் இன்னொருவனுக்கு பிரமோசன், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா- மனைவி தகராறு, …… பிரச்சினைக்கு , துன்பங்களுக்கு பஞ்சமில்லை. எல்லா பிரச்சினையும் பேசித் தீர்க்கலாம்யா, தைரியமாக இரு- ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும்,  பகுத்தறிவின் அடிப்படையிலே அறிவியல், மனோவியல், பொருளாதாரம், பொறியல், அவியல்…எதை பயன்படுத்தி எவ்வளவு அறிவு பூர்வமாகப் போனாலும், அதையும் தாண்டி துன்பம் வந்து சேருவதை நம்மால் தடுக்கும் வலிமை உடையவராக இருக்கிறோமா?  
 
 
நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக, எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
 
அப்படி ஏதோ குறைவான துன்பம் இருக்கும் வாழ்க்கையை வாழும் வாய்ப்பு நமக்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்தாலும்,  பாடுபட்டு தேடி சேர்த்த சொத்து, பணம், கவரவம், உறவு, நண்பர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு செல்லும் நிலையிலேயே இருக்கிறோம்.  All the properties. wealth, friends, relatives, prestige…etc shall be removed once for all,  (irrevokabaly removed) from us.
இரக்கமற்ற இயற்கையின் இரக்கத்தை நம்பி வாழ்கிறோம். We are at the mercy of a system which has no mercy.
 
 
 
நாம் இந்த உலகத்திலே சில  வெற்றிகளை பெற்று விடுகிறோம், அதனால் நாம் வலிமை உடையவராக , எல்லா துன்பங்களையும் விரட்டி அடைக்கும் சக்தி படைததவர்க்க இருப்பதாக நாமே கற்பனை செய்து கொண்டு ஏமாந்து விடுகிறோம் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.
ப‌ணமோ, த‌ங்க‌மோ, செல்வாக்கோ, ப‌த‌வியோ-இந்த‌ உல‌கத்தில் ம‌க்க‌ள் அடைய‌ விரும்பும் எந்த‌ பொருளும்- அவ‌ர்க‌ளைக் காக்க‌ முடியாது என்ப‌து தானே ஆன்மீக‌த்தின் அடிப்ப‌டை.



தொண்ணூராயிர‌ம் கோடி ரூபாய் ம‌திப்புள்ள சொத்துக்க‌ள், திருபாய் அம்பானியை ம‌ர‌ண‌த்தில் இருந்து காக்க‌ முடிந்த‌தா?
ஆஃப்கானில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குழுவிட‌ம் சிக்கிய‌ ஒருவ‌ரை அமேரிக்க‌, ருஷிய‌, சீன‌, இந்திய‌ நாடுக‌ள் கூட்டாக‌ அறிக்கை விட்டாலும் காக்க‌ நமுடியுமா? அப்ப‌டி மாட்டிக் கொள்ளாம‌ல் அவ‌ர் “ப‌த்திர‌மாக”‌வீட்டில் இருந்தாலும் அவ‌ர் எத்த‌னை நாள் சாகாம‌ல் “ப‌த்திர‌மாக”‌இருக்க‌ முடியும்? ந‌ம் நெருன்கிய‌ உற‌வின‌ர்க‌ள் சாகும் நிலையில் இருந்தால் அழுவ‌த‌த் த‌விர‌ ந‌ம்மால் ஆவ‌து வேரென்ன‌?


எந்த‌க் க‌ட‌வுளாவது இந்த‌ உல‌க‌த்தில் எந்த‌ ம‌னித‌னையோ, மிருக‌த்தியோ எப்போதும் சாகாம‌ல் க‌ப்பாற்றீ வைத்து இருக்கிறாரா?
பிரச்சினைக‌லுக்கு அடிமையாக‌ வாழ்ந்து, நோயால் வ‌ருந்தி, க‌டைசியில் சாகும் நாம், ந‌ம்முடைய‌ வாழ்க்கைய‌ நாமே தீர்மானிக்கும் வ‌லிமை உடைய‌வ‌ராக‌, அடிமை நிலையிலிருந்து முழு விடுத‌லையான‌ நிலையை, அதாவ‌து எந்த‌ துன்ப‌மும் ந‌ம்மை தாக்க‌ முடியாத‌ அள‌வுக்கு முழு விடுத‌லையான‌ நிலையை அடைய‌ முடியுமா?
நான் உட்ப‌ட இந்த‌ உல‌கிலுள்ளா எல்லா ம‌னித‌ர்களூம், கொடுமையான‌ இய‌ற்க்கையின் கையில் சிக்கி த‌விக்கும் அடிமை நிலையில் உள்ளதாக‌வே நான் க‌ருதுகிரேன்.


உட‌ல் இற‌க்கும் போது, உயிர் தொட‌ர்ந்து வாழ்ந்தாலும் ச‌ரி, இல்லை உயிரும் சேர்ந்து அழிந்தாலும் ச‌ரி -  எப்ப‌டியாக‌ இருப்பினும் நாம் ந‌ம்மைக் காக்க‌ இய‌லாத‌ அடிமை வாழ்க்கை வாழ்கிரோம்.


 அர‌ச‌னோ, ஆண்டியோ, செல‌வ்ந்த‌னோ, அறிங்க‌னோ, பாம‌ர‌னோ, ஏழையோ, வெள்ளைக் கார‌னோ, க‌றுப்ப‌னோ, ம‌னித‌னோ, மாடோ எல்லோரும் அடிமை நிலையில் இருப்ப‌தாக‌வே நாம் தீர்மானிக்கலாம். இது ஒரு PROBLEM .
 இத‌ற்க்கு  SOLUTION த‌ருவ‌து எதுவோ அதுவே ஆன்மீக‌ம்.

ஆன்மீக முயற்ச்சிக்கு, குரு கண்டிப்பாக தேவை என்பது சரியா?

இந்தியாவைப் போல குருவிற்கு மரியாதை கொடுக்கும் சமுதாயம் இருக்குமா என்பது சந்தேகமே. ஒன்றாம் வகுப்பில் ஆனா  ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் முதல் , கராத்தே ஆசிரியர், இசை ஆசிரியர் , ஆன்மீக குரு வரை எல்லோருக்கும் என்றும் மதிப்புக் கொடுக்கிறான் இந்தியன். பின்னாளில் தான் பெரிய ஆளாக வந்தாலும், பள்ளி டீச்சர் எதிரில் வந்தால் சிரித்து,  வணக்கம் செலுத்தி நலம் விசாரிப்பான்  சராசரி  இந்தியன். குருவுக்கும் , மாணவனுக்கும் உள்ள பந்தம் அலாதியானது, பிரிக்க முடியாதது.


நானும் எனது ஒன்றாம்  வகுப்பு ஆசிரியை முதல் எல்லா ஆசிரியர்களிடமும் மிக்க மரியாதை வைத்திருப்பவன் தான். ஆன்மீகத்தில், தத்துவத்தில்  என்னுடைய குருவாக நான் பாடம் கற்றது ,சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், கிருஷ்ணர், சாக்ரடீஸ், புத்தர்,   இயேசுகிறிஸ்து, முஹம்மது நபி, குரு நானக், கபீர், பெரியார், பாரதியார், பட்டினத்தார்,  தியாகராஜர்... ஆகியோரிடம் இருந்து.


இந்து மதத்தில் குருவுக்கு முக்கிய இடம் உண்டு.
குரு மீது ஒரு இந்து வைத்திருக்கும் மரியாதையும், அன்பும் பிணைப்பும் அளவற்றது. ஒரு மனிதனின் மனநிலை அடையக் கூடிய உச்ச கட்ட நிலைக்கு அவனைக்  கொண்டு சொன்று, துன்பத்திலே துடிக்காத மனநிலைக்கு ஒருவனை உயர்த்தி, ஒருவன் தன் இயல்பின் உண்மையான நிலையை அறியும்படி செய்து, அவனை சுதந்திரமுள்ளவனாக ஆன்மீக குரு ஆக்குகிறார் என்பதே மாணவனின் எண்ணம். சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சென்னை சொற்பொழிவில் "நான் சொல்லியதில் மனித குலத்துக்கு ஏதாவது நன்மை இருந்தால் அது என்னுடைய  குரு இராம கிருஷ்ண  பரமஹம்சரால், நான் சொல்லியதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்க்கு காரணம் நானே" என்றார்.

சுவாமி விவேகானந்தருக்கு இராமகிரிஷ்ணர கிட்டியது போல, அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிட்டியது போல எல்லோருக்கும் ஆன்மீக குரு கிடைத்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்கும். அப்படிக் கிடைக்காத பட்சத்திலே என்ன செய்ய முடியும்? குரு கிடைக்கவில்லை என்றால், முந்தைய குருக்கள் சொல்லியதை வைத்து படித்துப் பார்த்து நாமே  நம்மை ஆன்மீக ரீதியில் உயர்த்திக்  கொள்ள முயல்வதுதானே  நடக்கக் கூடியது? சரியான குரு கிடைக்கவில்லை என்றால் , கிடைக்கும் யாரையாவது குருவாக வைத்துக் கொள்ள முடியுமா?
ஆனால் குரு கண்டிப்பாக  அவசியம், குரு இல்லாவிட்டால் முடியாது என்று ஒரு conditional clause வைப்பது ஏன்?
ஆனால் குருதான் எல்லாம், குரு இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்ற கருத்தை பலரும் சொல்கிறார்கள்.

ஆன்மீக முன்னேற்றத்துக்கு குரு கண்டிப்பாக வேண்டும் -இதை எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று விளக்க முடியுமா?

குரு இல்லாவிட்டால் ஆன்மீக முன்னேற்றம், விடுதலை கிடைக்காது என்று கீதையில் சொல்லி இருக்கிறதா? கீதையில் எனக்கு தெரிந்து குரு அவசியம் என்று சொன்னதாக ஒரு இடத்தில் கூட இல்லை. குரு என்கிற வார்த்தையை கூட கிருஷ்ணர் சொன்னதாக நினைவு இல்லை.

துரோணாச்சாரியாரைக் குறிக்க ஓரிரு இடங்களில் அர்ஜுனன் குரு என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார்- அது ஆன்மீக குருவைக் குறிக்க அல்ல, வில் வித்தை குருவைக் குறிக்க.
இப்படி ஆன்மீக முயற்ச்சிக்கு குரு என்று ஒருவர் இருந்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் முடியாது என்று முட்டுக் கட்டை போடுவது சரியா?


அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கிடைத்தது போல , விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்து போல சிறப்பான குரு கிடைத்தால் நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால் ஆன்மீக முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. பொருத்தம் இல்லாதவரை குரு, குரு என்று தலையில் வைத்துக் கொண்டாடினால், மக்களுக்கு, சமுதாயத்துக்கு, இந்து மதத்துக்கு பின்னடைவே உருவாகும்.


எல்லோரும் பள்ளிக்கு செல்கிறார்கள். கீதை உபநிடதங்கள் இவை எல்லாம் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு கடைகளில் கிடைக்கின்றனர். அவற்றைப் படித்துதான் பலரும் இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்கிறார்கள். கட உபநிடதம் போன்றவை புரிந்து கொள்ள மிக எளிதாகவும் உள்ளன.

இன்றைக்கு ஆன்மீக விடயங்களைப் பற்றி சிந்திக்கும் பலரும்,  இப்படிப் படிப்பறிவில் கற்றதிலும், வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியாலும் , தாங்கள் மனக் குவிப்பு, பூசனை போன்றவற்றின் மூலம் பெற்ற ஆன்மீக முன்னேற்றத்தையும் அடிப்படையாக வைத்தே எழுதுகிறார்கள். எல்லோருக்கும் குரு இருக்கிறார்களா?

குரு என்று சொன்னால் அவர் ஆன்மீக முயற்ச்சியில் தானே வெற்றி பெற்றவராக இருக்க வேண்டும்- புத்தரைப் போல, ஆதி சங்கரரைப் போல, சுவாமி விவேகனந்தரைப் போல்.
வெறுமனே எழுதப் பட்டுள்ளவற்றை படித்து சொல்வதானால் அதை நாமே படித்துக் கொள்ளலாம். இன்னொருவர் சொல்லிக் கொடுத்தால் தவறில்லை.
ஆனால் அப்படி படித்துப் பொருள் சொல்லும் குரு இல்லை என்றால், நாம் படித்து தெரிந்து கொள்ள முடியாதா? யார் வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம்.


இதை நாம் சொல்லுவது  ஏனென்றால், இன்றைக்கு பல இளைங்கர்கள் கூட ஒரு குரு தேவை, அவரைத் தேடு, அவர் காலில் விழு, அவர் சொல்வதை அப்படியே கேள்......... என்கிற வலையில் விழுகிறார்கள்.  பின்னாளில் "குரு"வுக்கு ஏதாவது ""பிரச்சினை'' என்றால் "சே, அவரு நல்லவருப்பா, ... இவங்க சும்மா சொல்றாங்க" என்று பில்ட் அப் கொடுக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள். அப்போதும் குருவை விட முடியாது. ஏனெனில் தான் இத்தனை நாளாக ஏமாற்றப் பட்டதை   ஒத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது.


இன்றைக்கு குரு பிசினஸ் ஒரு சூப்பர் பிசினெஸ் என்பது பலருக்கும் தெரிந்தே உள்ளது. ஆதி சங்கரர் போல கையிலே நயா பைசா இல்லாமல் இந்தியா முழுவதும் கால்நடையாக சுற்றி வரும் குரு யாராவது இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.  ஆதி  சங்கரர் கூட துறவி, இல்லறத்தாராக இருந்து கொண்டு எனக்கு பணம் காசு வேண்டாம்,  நிதி சால சுகமா, இராமு நீ சந்நிதி சேவா சுகமா"'  என்று பாடி தெருவிலே உஞ்சி விருத்தி எடுக்கும் குரு தியாகராஜர் போல யாரவது இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

குரு பிக்ஷா பண் ட்  என்று போட்டு பணம் வசூல் செய்கிறார்கள். குரு பிக்ஷா என்றால் அவர் ஆதி சங்கரர் போல, தியாகராஜர் போல தெருவில் வந்து பிஷை எடுக்க வேண்டும் அல்லவா, அதுதானே இந்து மதம் காட்டிய வழி. இப்படி பண்ட் போட்டு வசூலிப்பதுதான் சனாதன தர்மமா? ஆதி சங்கரர் சொல்லி இருக்கிறார்   அர்த்தம் அனர்த்தம் - பணம் காசு  கெட்டதே செய்யும் - என்று. அப்புறம் எதற்கு இவர்களுக்கு  பணம் காசு.  கட்சிக் காரர் நிதி வசூல்  செய்து கட்சி தலைமையிடம் பேர் வாங்கி சீட்டு வாங்குவதற்கும்    இதற்கும் என்ன வித்யாசம்?  என் தலைவன் இல்லாவிட்டால் இந்த நாடு என்ன ஆகும் என்று சொல்வது போலத்தான் "குரு" இல்லாவிட்டால் ஆன்மீகம் இல்லை என்பது.

உங்களிடம் யாரவது வந்து,  குரு
ஒருத்தர் இருக்கிறார்  , வாங்க பார்க்கலாம் என்றால் அவர்களிடம் உங்கள் குரு கையிலே பணம் வைத்துக் கொள்ளாமல் , சொத்து , பத்து இல்லாமல் இருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் பிஷை எடுத்து உண்கிறாரா என்று கேளுங்கள்.  

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!

சங்கீத சீசன்  சென்னையில் களை கட்டுகிறது.  பிளைட் பிடித்து வெளி நாட்டில் இருந்து பலரும் சென்னைக்கு பறந்து வருகின்றனர். சென்னையில் பல சபாக்கள் உள்ளன. எல்லாம் ஹவுஸ் புல். சீட் கிடைப்பது அரிது.  புதிய  இளம் கலைங்கர்களுக்கு பாட இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

நான் சிறுவனாக இருக்கும் போது கேட்டது எல்லாம் சினிமாப் பாட்டுதான்.  “மை நேம் இஸ் பில்லா” , “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” போன்ற பாடல்கள் தெருவிலே ஒலித்துக் கொண்டு இருக்கும். எனக்கு தமிழ் சினிமாப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்த கர்நாடக சங்கீதம் என்றால் எனக்கு புரியவே புரியாது.
என்னடா இது ஆஆ,  ஆஅ …..என்று அரை மணி நேரம் இழுக்கிறார்கள், இதை  இவ்வளவு பேர் உட்கார்ந்து கேக்குறாங்க, என்ன இருக்கு இதுல … என்று உண்மையிலேயே எனக்கு புரியாது.


ஆனால் கடந்த 8 வருடங்களாக கர்நாடக இசையை சிறிது சிறிதாக  ரசிக்க  ஆரம்பித்திருக்கிறேன் என்றால்,  இன்னும் சொல்லப் போனால் நான் வீட்டிலே பாடவும் செய்கிறேன் அதற்க்கு காரணம்  திரு. பால முரளி கிருஷ்ணா, இளையராஜா,  திருமதிகள்   எம். எஸ். எஸ்.  , எம். எல்.வி. ,  டி.கே.பி   ஆகியோரின் பாடல்களை சி.டி.யில்  கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் தான். 






மேலே தொடரு முன் இசை ஞானி இளையராஜா அவர்களின்   இந்தப் பாடலை  காணுமாறு, கேட்குமாறு கோருகிறேன். இது சினிமாப் பாடல்தான்.

http://www.youtube.com/watch?v=-h96lau-B0I&feature=related


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்,

 அதில் வாழும் தேவி நீ, இசையை மலராய் நானும் சூட்டுவேன்!

ஆத்மா ராகம்  ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே,

 உயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே!
……
இந்த பாடல் ஒரு காதலன் தன காதலியை நோக்கி பாடும் பாடலாகும். ஆனாலும் அந்த காதலன் ஒரு பாடகன் பாத்திரமாக  உள்ளதால், அந்தப் பாடகன் இசையின் கூறுகளை தன் காதலிக்கு விளக்கி வாழ்வையும்  இசையையும் ஒப்பு நோக்கி இருக்கிறார்ன். உயிரின் ஜீவ நாடி சரியான இடை வெளியில் துடிப்பது போல இசைக்கு தாளம் முக்கியமான உயிர்த் துடிப்பாக உள்ளது.

காமம் தேடும் உலகிலே, கீதம் என்னும் தீபத்தால்,

ராம  நாமம் மீதிலே, நாத தியாக ராஜரும்,

ஊனை உருக்கி  உயிரில் விளக்கை ஏற்றினார் அம்மா, 

அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்!

இசை துறையில்  சிறந்து விளங்கிய  தியாகராஜ சுவாமிகளை பற்றியும் பாடலில் குறிப்பிடுகிறார். இசையையும் ஆன்மீகத்தையும் தன் இரத்தமும் மூச்சுமாக வைத்து வாழ்ந்தவர் தியாகராஜர்.

 சத்குரு   தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை மிக அற்புதமானது, இலக்கண சுத்தமாக எதுகை மோனையுடன் கூடிய 600 க்கும் மேற்பட்ட பாடல்களை  அவர் இயற்றி உள்ளார். அவை எல்லாவற்றுக்கும் இராகங்களின் மூலம் இசையை அமைத்து தானே பாடியும் இருக்கிறார். பாடாலாசிரியர் , இசை அமைப்பாளர், பாடகர் ஆகிய மூவராகவும் அவரே இருந்து இருக்கிறார்.


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் தன்னுடைய பாடலுக்கோ, இசைக்கோ அவர் பணம் எதையும் வாங்கவில்லை.  வீதியில் தன்னுடைய பாடல்களை பாடிக் கொண்டே உஞ்சி விருத்தி என்னும் பிச்சை எடுத்து, அதை வைத்து கஞ்சி குடித்து வாழும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து விட்டார் அவர்.  


தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர், இவரை தன் அரசவையில் ஆஸ்தான கவிஞராக பதவி  அளித்து ஆயிரம் பொன்னும் அளித்து அவரை அழைத்த போதும்,    அவர் பதவியையும் மறுத்து, பணத்தையும் மறுத்து மக்கள கவிஞராகவே இருந்து விட்டார்.


அவர் தலைவராக ஏற்ற இராமரின் கொள்கைப் படியே, பதவி என்பது தோளில் போடக் கூடிய துண்டு போன்றது, கொள்கை என்பது இடுப்பில் கட்டக் கூடிய வேட்டி போன்றது என்பதை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

தியாகராஜரின் பாடல்களின் அர்த்தத்தை மனதில் வாங்கி , ஆராய்ந்து அதில் கலப்பவர்கள்  மனதிலே உள்ள நல்ல குணங்கள் இன்னும் அதிகமாகும் வகையிலே, மனதிலே அமைதி உருவாகும் வண்ணம் பாடலின் பொருளும் இசையும் ஆக்க பூர்வமாக  அமைந்து உள்ளன. 

பகுத்தறிவையும், நம்பிக்கையையும் இணைத்து ஒரு மிகச் சிறந்த ஆன்மீக வழியை இசையின் மூலம் வழங்கி இருக்கிறார் சத்குரு  தியாகராஜா சுவாமிகள்.