Thursday, July 14, 2011

"இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதற்கு மேல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்...! "

அப்ப இது வரைக்கும் என்னய்யா செஞ்சீங்க,

பயங்கரவாதிக்கு பேவரிட் இடமாக மும்பை இருக்கிறது. சொல்லி வச்சது மாறி சவேரி பசாரில் மூன்றாவது முறையாக வெடித்து இருக்கிறான்.


டிராபிக் போலீஸ் , போதைப் பொருள் தடுப்பு போலீஸ் என்று இருப்பது போல பயங்கரவாத தடுப்பு போலீஸ் அமைப்பை உருவாக்கி மும்பையில் எல்லா இடங்களிலும் ஸ்டேசனை உருவாக்கி இருக்க வேண்டும். மும்பையில் சாலைகளில் வீடியோ காமெராக்களை அதிகமாகப் பொறுத்த வேண்டும். பிளாட்பாரத்தில் கடை வைத்து இன்பார்மர்கள் ஆக்கி புதிய நபர்கள் வரும் போது தகவல் குடுக்க சொல்லலாம்.


ஆனால் பொறுப்பில் இருப்போர் செய்வது என்ன? பயங்கரவாதி குண்டு வெடித்தவுடன் , இது முகமற்ற கோழைகளின் செயல், இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொல் ல வேண்டியது, பிளைட் பிடித்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துபார்வை இட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவோரை தடவிக் கொடுக்க வேண்டியது, மறுபடியும் பிளைட் பிட்த்து திரும்ப வேண்டியது – இதுதான் நடக்கிறது!

2 comments:

  1. ஆனால் பொறுப்பில் இருப்போர் செய்வது என்ன? //

    பொறுப்பாக இருந்தாலே அசம்பாவிதங்கள் தடுத்திருக்கலாம்.

    ReplyDelete