Sunday, January 16, 2011

குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் என்ன? – காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பட்டி மன்றம்!

அன்புக்குரிய நண்பர்களே….. நலந்தானே ….. இது பட்டி மன்றம், நல்லா சிரிங்க,  அப்பப்ப கை தட்டுங்க..

இந்திய சமூகத்தின் அடிப்படை குடும்பமே.  குடும்பங்களே இந்திய சமுதாயத்தை உருவாக்குகின்றன. ”நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” அப்படின்னு சொல்லி இருக்கங்க. எனவே குடும்பங்கள் சிறப்படைந்து அதிக வளமையும் செல்வாக்கும் பெற்றால் நாடு முன்னேறும்.


எனவே இன்றைய பட்டி மன்றத்திலே  5 அணிகள் கலந்து கொண்டு சொற் போர் ஆற்ற இருக்கிறார்கள்.


என்னய்யா, தூங்கிடாதீங்க… தூங்கினா  நான் அப்பப்ப கடி ஜோக் அடிப்பேன்.
மேலும் இது இணைய தள  பட்டி மன்றம் ஆதலால் கொஞ்சம் வித்யாசமானது. தலைப்பை  மட்டும்   தான் நாங்க சொல்லுவோம்.  எந்த தலைப்பு உங்களுக்கு சரின்னு தோணுதோ அந்த தலைப்பின் சார்பாக நீங்களே வாதத்தை முன் வைக்கலாம். எவ்வளவு ஜனநாயகம் பாருங்க.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப அங்கத்தினர்கள் நிறைய பணம் சம்பாரித்து வளமையாக இருப்பதே!என்ற தலைப்பை வலியுறுத்தி கம்பன் அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப் படுவதே! என்ற தலைப்பை வலியுறுத்தி இளங்கோ அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப தலைவர் பிற குடும்பங்களுடன் நட்பை உறுதியாக வைத்திருப்பதாலேயே! என்ற தலைப்பை வலியுறுத்தி பாரதி அணியினர் பேசலாம்.


 குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு இலவசங்கள் வழங்கப்  படுவதாலேயே!என்ற தலைப்பை வலியுறுத்தி வள்ளுவர் அணியினர் பேசலாம்.


குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம், குடும்ப அங்கத்தினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதே! என்ற தலைப்பை வலியுறுத்தி பாரதிதாசன் அணியினர் பேசலாம்.

முக்கிய குறிப்பு: இந்த பட்டி மன்றம் பொதுவாக  இந்திய குடும்பங்கள், தங்களை வளர்ச்சி அடைய செய்வது பற்றிய காரணங்களை அலசும் பட்டி மன்றம். இது எந்த தனிப் பட்ட குடும்பத்தையோ, சில குடும்பங்களைப் பற்றியோ ஆராயும் பட்டி மன்றம்  அல்ல. இதை உணர்ந்து நண்பர்கள் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காத்து பின்னூட்டங்கள்  மூலம்  சொற்போர் ஆற்றலாம்.  ஒரு சிலரைக் குறிப்பிட்டு  கருத்து சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


அனைவரையும் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.  (யாரும் உரை ஆற்ற வராவிட்டாலும் நாங்க ஈ ஒட்டி விட்டு எழுந்து செல்வோம்)!


Title: குடும்ப செல்வாக்கு வளர்ச்சி பெறுவதற்கு காரணம் என்ன? – காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு   பட்டி மன்றம்!

No comments:

Post a Comment