Wednesday, January 12, 2011

தைரியமாக இரு, எழுந்து நில், நீ வலிமை உடையவன்! உனக்குத் தேவையான எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது



தைரியமாக இரு, எழுந்து நில், நீ வலிமை உடையவன்! உனக்குத் தேவையான எல்லா ஆற்றலும் உன்னிடமே உள்ளது”- சோர்வுற்ற , கஷ்டப்பட்ட, வாய்ப்பிழந்த அப்பாவியின் நண்பன், ஆசான் சுவாமி விவேகானந்தர்.  


                     
            
          
                         

இந்தியர்களின்   தன்னம்பிக்கையை  வலுவடைய செய்த சுவாமி விவேகானந்தரின் 150௦ ௦ வது  பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று துவங்குகின்றன. இந்திய அரசு  ஒரு குழுவை அமைத்துஅதன் தலைவராக மாண்புமிகு பிரதமரே அமர்ந்து இருக்கிறார்


 சுவாமி விவேகானந்தர் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். இந்தியாவிற்கு வெளியே மத நல்லிணக்கம் என்கிற கோட்பாட்டை  அறிமுகம் செய்தவர் சுவாமி விவேகானந்தரே. எல்லா மதங்களையும் அங்கீகரித்து, எல்லா மதங்களும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல் பட முடியும் என்பதை எடுத்துக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தர் சாதாரண பிட்ச்சாண்டி துறவியாகவே தமிழகம் வந்தார். அவரை சரியாக அடையாளம் கண்டு அமேரிக்கா செல்ல உதவியது தமிழகத்தில் இருந்தவர்களே. அவர் அமெரிக்காவில் கொண்டு போன பணம் எல்லாம் செலவான நிலையில், "குளிராலோ , பசியாலோ நான் இங்கு இறக்க நேரிடலா, ஆனால் இந்தியாவில் வாழும் கோடி மக்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்று எழுதினார். "பிச்சை எடுப்பதற்காக தெருவுக்கு சென்று இருந்தால் அமெரிக்காவில் சிறை வாசமே என் முடிவாகி இருக்கும்" என பிறகு குறிப்பிட்டார். அந்த நிலையில் அவருக்கு பணம் அனுப்பி உதவியது சென்னையில் இருந்தவர்களே.


சுவாமி விவேகானந்தரின் தன்னம்பிக்கைக் கருத்துக்களை, பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை  மத நல்லிணக்கக் கோட்பாட்டை விளக்குவதில் பரப்புவதில் தமிழகம் என்றும்  முன்னணியில் நிற்கும்.


            
                                     

No comments:

Post a Comment